பகுதி - 41
சினம் என்றால் அப்படி ஒரு சினம்.. தாமரைக்கு.. அவள் அழைத்தால் என்று காண வராமல் இருந்திருக்கிறாள்.. நிச்சயமாக , வருவேன் என்று தெரிந்தே.. கையில் மதுக் கோப்பையுடன் இருப்பதை காணவும் பொங்கி எழுந்தவள்.. இமைக்கும் பொழுதில்.. மான்சியின் கரத்தில் உள்ளதை பறித்து விட்டெறிந்திருந்தாள் .
அவள் பின்னாலேயே.. சுற்றிக் கொண்டிருந்த.. ஆரவ்வின் முகத்தில் , எறிய வேண்டும் என்பது போல் வேகம் இருந்தாலும்.. அதை செய்ய விரும்பாமல், காலில் எரிய.. அவன் சுதாரிக்கவில்லை என்றால்.. கண்டிப்பாக.. இரத்தக் காயம் ஏற்பட்டிருக்கும் .
" நீங்க திருந்தவே மாட்டியளா.. கொஞ்சமும் சுய புத்தியே இருக்காதா.. இவ்வளவு நாள் , உங்க அம்மாவோட பேச்ச கேட்டு.. சீரழிஞ்சீயன்னா.. இப்ப இந்த ஆளோட கூட்டு சேர்ந்து.. கெட்டு ஒழிஞ்சிப் போகணும்னு மூடிவே பண்ணீட்டியளா.. காலங்கார்த்தாலேயே.. இப்படி குடிச்சிட்டு இருக்கீய..", என்று எகுறிக் கொண்டிருந்தவளுக்கோ, அந்த கண்ணாடி டம்பளர்.. அவன் காலை பதம் பார்க்காமல் குறித் தப்பிவிட்டதே என்ற ஆத்திரமும் அதிகரித்தவளாய்.. ஆரவ் இருப்பதையே சட்டை செய்யாமல்.. கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவளை.. அவள் பின்பக்கமாக நின்று.. இரு தோள்களையும் பற்றி ,
" ஹேய்.. லோட்டஸ்.. அது ஆப்பீ கூல் ட்ரிங்.. அதுக்கு எதுக்கு இந்த குதிகுதிச்சிட்டு இருக்க..", என்று அடக்கியவனின் பிடியில் இருந்து திமிறியவளாக நகர்ந்து..
" என்னைய தொட்டுகிட்டு பேசிற வேலையெல்லாம் வச்சுக்காதீய.. அம்புடுதேன்.. சொல்லுவேன்.. ", என்று தன் சுட்டுவிரலை நீட்டி , கண்களை உருட்டி , மான்சியின் பக்கமாக நின்றுக் கொண்டு மிரட்டியவளை.. புன்சிரிப்போடு , ஏறிட்டவன்.. இரு கைகளையும் தூக்கிக் கொண்டு , " ஓகே. ஓகே.. லோட்டஸ்.. நான் தொடலை..", என்று சிரித்தான்.. உக்கிரமாக முறைத்து முகத்தை சிலுப்பிக் கொள்ள.. வாய்விட்டு சத்தமாக.. இருந்த நிலையிலேயே , சிரித்துக் கொண்டு இருந்தாள் மான்சி...
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...