வா.. வா.. என் அன்பே - 93

961 40 20
                                    

பகுதி - 93

நடிகை ஜாஸ்.. இருபது ஆண்டுகளாக சீனியர் முன்னணி நடிகையாக இன்றும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.. நாற்பது வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாதவளாக வலம் வருபவள் .

ஏனோ , இளம் நடிகர்களுடன் ஹீரோயினாக நடிப்பதாலோ என்னவோ.. சரணிடம் நெருக்கம் காண்பிக்க எவ்வித தயக்கங்களும் அவளுக்கு உண்டாகவில்லை . ஆனால் , சிறு பயம் இருந்தது மட்டும் முற்றிலும் உண்மையாக இருந்தது . அவனை நெருங்குவதோ.. ஏன் நேரில் சந்திப்பது என்பதோ அறிதான செயலாக தங்கள் வட்டாரங்களுக்குள் குறிப்பிடுவதாலேயே அதனை.. தன் பெயர்.. புகழால்..  உடைத்து எறிய வேண்டும் என்பதை சவாலாகவே நினைத்து இங்கு வந்திருந்தாள் .

ஜாஸ் ஒன்றை மறந்திருந்தாள் ‌. ஆர்.பீ. எஸ்ஸின் தொழில் சாதூர்யத்தை பற்றி.. தன் சொந்த விருப்புகளை என்றுமே தொழிலில் திணிக்க விரும்பாதவன் என்பதையும் அறியாதவளாய் இருந்தாள்.. அவ்வளவு எளிதாக எவரையும் பகைத்துக் கொள்ள நினைக்காதவன் என்றும்.. . அவனின் பகைமையும்.. அவனுடைய எதிரிகளால் வாய்விட்டு பகிர்ந்துக் கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கும் என்பதும் .

சரணும் ஜாஸ் பற்றி நன்கு அறிவான் . ஆனால் ,  தன்னை காண இத்தனை துணிச்சலுடன் வருகை தந்திருப்பதற்கான காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டி இருக்கவே.. மௌனமாய், அவளை சந்திக்க சம்மதித்தான் . எல்லைகளை தாண்டுபவள் என்று நன்கு தெரிந்ததே.. அதனை , தன்னிடமும் காட்டுவாள் என்று நினைக்கவில்லை ‌. அதேசமயம் , அவனின் அழுத்தமான ஆளுமையும்.. அவளது எல்லையை அறிய முற்படவே அமைதி காக்க செய்திருந்தது .

தீண்டியும் தீண்டாமலும் பதித்த இதழ் ஒற்றல்.. சரணிடம் காட்டிய முன்னோட்டம் என்பதை அறியாதவன் இல்லை . அதேசமயத்தில் , தான் அனுமதி வழங்காமல் அவனது அறைக்குள் வைஷ்ணவாலேயே நுழைய முடியாது என்பதால்.. அலட்சியமாகவே , அவளை கவனித்தவனாக இருந்தான் . எதிர்பாராத நிகழ்வாய் , அவன் மனைவி தாமரை முறியடிப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை .

வா.. வா... என் அன்பே...Dove le storie prendono vita. Scoprilo ora