வா.. வா.. என் அன்பே - 80

2.7K 45 14
                                    

பகுதி - 80

மான்சியின் மனதில் கல்லை ஏற்றிவிட்டு.. தாமரை இறகை சுமந்தவளாய்.. ஆராவுடன் பறந்து கீழே சென்று ரிச்சர்ட்டின் கண்டன பார்வைக்கு ஆளானவளாக தவிப்புடன் மன்னிப்பு வேண்டியவளாய் இதழ் அசைவில் கெஞ்ச.. " சரண் எங்கே ? ", என்று கேட்டாலும் குரலில் வெப்பத்தை வெளிட்டதுமே..

மித்ரன் , அங்கு இல்லாமல் இருப்பதை புரிந்து விழிகளை அலைய விடுவதற்கு முன்பாகவே , அவள் பின்னால் உரசியவனாய் நிற்கவும்.. எங்கே போனான்  என்று அவளுக்கு கேட்டறிய நா தவியாய் தவித்தாலும்.. சற்றுமுன் , நடந்தவைகளால் வெடவெடப்பை மறைத்தவள் போன்று பாசங்கு செய்திருந்த போதும்.. நடுங்கிக் கொண்டிருக்கும் அவள் மேனியில் அதிர்வை தன் மெல்லிய உரசலால் கண்டுக் கொண்ட சரணோ , வேட்டை நாயை வேட்டையாட சமயம் பார்த்து காத்திருக்கும் வேங்கையாய் பளபளக்கும் விழிகளுடன் காத்திருந்தான் . 

கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என்று குரல்கள் எதிரொலிக்கவே , தன்னிலை அடைந்தவர்களாக.. கணவன் மனைவி இருவரும் தம்தம் எண்ணங்களில் இருந்து விடுப்பட்டு  மணமக்களின் மீது பார்வையை பதிக்க.. ரிச்சர்ட்டோ , இரண்டு முடிச்சுடன்.. அந்த அவசர நிலையிலும் தங்கையின் முகம் காண , விரைந்து மூன்றாம் முடிச்சிட்ட தாமரை.. விழிகளில் பளபளக்க இதழ் பூத்தவளாய் அவனை காண.. வாஞ்சையாய் வருடியவன்.. பின், காதலாய் உதயாவை வருடவும்.. நான்கு விழிகளிலும் வெற்றிப் பெருமிதமே எஞ்சியதாய் ‌ .

தன் மகிழ்ச்சியை தாமரை சரணிடம்  பகிர்ந்துக் கொள்ள விரும்பியவளாக.. அவனிடம் திரும்ப , முதுகுக்காட்டியவனாய் மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான் . தன் சிந்தனைக்குள்ளாக தாமரையை மூழ்கவிடாது செய்த நண்பர்களின் செயல்கள்.. ரிச்சர்ட் மற்றும் தாராவின் விளையாட்டில் திசை திருப்ப.. தற்காலிகமாக , மித்ரனின் நினைப்பிற்கு விடைக் கொடுத்து , கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டவளாய் .

யுவனின் உள்ளம் நெருப்பென எரிந்துக் கொண்டிருந்தது.. அவளாக சொல்லும் வரை அவள் மான்சியிடத்தில் வேலைப் பார்த்திருந்த தாமரை என்பதை அவனால் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை . தெரிந்த உண்மையை ஜீரணிக்கவும் முடியவில்லை. போயும் போயும்.. இவளிடமா.. என்ற நினைப்பும் ஒருபக்கம் அரித்ததாக இருந்தாலும்.. கருங்காலியா இவள் என்ற எண்ணமும் இடைப்புகுந்து ஆட்டுவித்ததாய்.., இவை அனைத்தையும் கடந்து அவன் கேட்டதற்கு மிகத் திமிராக.. அவள் கொடுத்த பதிலை ஜீரணிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவன்.. இருக்கையில் , அமர்ந்து கொதித்தவனாக இருக்க.. ஒருவித உதறலும் உடலில் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது .

வா.. வா... என் அன்பே...Donde viven las historias. Descúbrelo ahora