அன்பே - 11

1.2K 36 2
                                    

பகுதி - 11

மான்சி அளித்த வேலையும் இல்லாமல் போகவே.. கல்லூரி படிக்கும் வயதில் இருப்பவள் , அந்த இளமை கால இன்பங்களை பற்றிய நினைவுகளே இல்லாமல் நாயாக.. பேயாக அலைந்து கொண்டிருக்கிறாள் பணத்திற்காக..!

சுந்தரி நடிக்கும் படத்தின் ப்ரொடியூசர்.. அவருக்கு மிகவும் வேண்டியவராக இருந்ததால்.. தாமரையையும் உடன் அழைத்து செல்ல முடிந்தது . அவளை பற்றிய நினைவில் இருந்தவர்.. பிடிவாதமாக அவளுக்கு தேனீர் அருந்த வைத்து.. மீண்டும் அமைதியாக அருகே அமர்ந்து கொண்டார் .

பகலவனின் இருள் பசி , தீர்ந்துவிட்டது போலும்.. மெது மெதுவாக , தன் கதிரொளிகளை வீசி வானில் தன் விடியலை துவக்க.. ஆனால் தாமரைக்கோ‌‌.. தாயின் அஸ்தமனத்தில் தான் புலர்ந்தது .

மருத்துவமனையில் இருந்து , தாயை கொண்டு வந்த பிறகோ.. அழுதழுது கதறியவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் கலங்கியிருந்தார் . பல வருடங்களாக ஒரே இருப்பிடத்தில் அவர்கள் இருப்பதாலேயே.. அக்கம்பக்கத்தினர் உதவி புரிய.. அந்த மூன்று உயிர்களும் மரவட்டையாய் தரையில் சுருண்டு கிடந்தார்கள் .

தாமரையின் இழப்பிற்கு அர்த்தமற்றதாகி போனது . மான்சியால் தன் தாய் இழந்தாள் என்றால்.. அவள் கணவனால் எதிர்காலத்தை இழந்திருந்தாள்... அழுதழுது வீங்கிய கண்கள்‌.. தாயின் புகைப்படத்தையே வெறித்திருக்க.. எண்ணங்களோ.. அன்னை முதன்முதலாக சுருண்டு விழுந்த நாளை நினைத்தவளாய்..!

130 ஆண்டுகள் கடந்தும் பெயருக்கு பொருந்தினார் போல்.. அந்த அழகிய இரும்பு ராணி அழகியால்.. உலகத்திலேயே , மிகவும் கவர்ச்சியான மற்றும் கொண்டாட்ட நகரங்களில் ஒன்றான பாரிஸ் மாநகரத்தில் இருந்துக் கொண்டு.. எவ்வித கேளிக்கைகளிலும் ஈடுபட முடியாமல் , அமைதியின்று துடிப்பவனுக்கு , எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும்.. மான்சியின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாதவனாக.. தவித்திருந்தான் சரண்மித்ரன் .

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு கொண்டிருந்தவனுக்கு.. காணொளியில் அவளது பேட்டியே.. உலா வந்து கொண்டிருந்தது . இயலாமையில் இருந்து இன்று வரை வெளி வர முடியாதவனாய்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now