வா.‌ வா‌‌.. என் அன்பே - 82

1.4K 40 15
                                    

Hi friends ,

Didn't edit properly.. due to heavy work so pls consider my spelling mistakes..😁😁😁😁

பகுதி - 82

அணைப்பு , முத்தம் , காதல் மொழிகள் என்று அவளிடத்தில் வெளிப்படித்திய நேசத்திற்கு பிறகும் தாமரையின் நடுக்கமும் தவிப்பும் சரண் மித்ரனை கூறுப்போட்ட... என்ன செய்தால் அவளது கூட்டில் இருந்து வெளி வருவாள் என்று யோசித்துபார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்து வந்தான் . அதில் , இவ்வீடும் ஒன்று.. அதிரடியாக

தொலைபேசியில் உரையாடி மாதம் ஒருமுறை மட்டுமே சகோதரனை நேரில் பார்த்து வருபவள் மறந்தும் விடுமுறை நாட்களில் அவர்களுடைய இல்லத்திற்கு ஒருபோதும் அழைத்து வந்ததது இல்லை வரவும் அனுமதித்தது இல்லை.. சாந்தியின் வீட்டில் இருக்க அனுமதிப்பவளால்.. அவளது வீட்டிற்கு வரவிட்டது இல்லை . அவன்.. அவனது குடும்ப நபர்கள் காட்டும் நேசமும்.. இது போன்ற விஷயங்களில் அவளிடம் கானல் நீராகி போய்விடும்..

தாழ்வு மனப்பான்மையா.. உறவை ஏற்றுக் கொள்ளாத நிலையிலையே நிறுத்தி வைத்திருந்தாளா என்று என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக நினைத்தான் ‌.

அதனாலேயே , அவள் கண்களுக்கு எட்டாத , அவளுள் ஒளிந்திருக்கும் அழகை தங்களது விளம்பரத்தின் மூலமாக உலகறிய செய்து தாமரைக்கு இன்ப அதிர்ச்சி அளித்தவன்.. மேலும் , பல லட்சங்கள் அதிகமாவே செலவழித்து.. இந்த மனையை வாங்கினான் . ரிச்சர்ட்டையும் இவர்களையும அன்னையாக தாங்கும் சாந்தியின் மீது இருந்த மரியாதையும்.. அவர்களது தாயாகி போனவரின் பெயரிலேயே வீடு கட்டவும் செய்து பல அதரடிகளல் திக்குமுக்காட நினைத்தால்.. விளம்பர வெளியீட்டு நாளின் மாலையில் , தாமரை நிகழ்த்துவாள் என்று கனவிலும் நினைக்காத ஒன்று..

ஆயிரமாயிரம் கற்பனைகளோடு அவன் காத்திருந்த நாளை புரட்டிப் போட்டவளிடம் எழும் சினத்தை அடக்க முடியாமல் தடுமாறியவனாய் அறைக்குள் தனது லேப்டாப்புடன் அமர்ந்தான் ‌சரண் . மெல்ல கொலுசு ஒலி காதை தீண்டிய போதும்.. அசையாது தன் வேலையை தொடர்ந்தவனாய்.. பல தயக்கங்களுக்கு பிறகு , "இந்தாங்க பால்..", என்று வரவழைத்த தைரியத்துடன் சொல்ல...

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now