அன்பே - 7

1.4K 38 5
                                    

பகுதி - 7

குளியலறைக்குள்.. விழிந்தோடும் நீரோடு.. தாமரையின் விழிநீரும் கலந்து வழிந்தோட , கண் மூடி கல்லாய் சமைந்து நின்றவள் , எவ்வளவு நேரமோ !

கண் திறக்கும் பொழுது பார்வையில் விழுந்தவன் சரண்மித்ரனே . கொஞ்சம் திகைத்தாலும் , அமைதியாக தன் விழிகளை தாழ்த்த.. அடர்ந்து வளர்ந்திருந்த இமைமுடி  குடையாக சரிந்து... கன்னத்தை தொட்டது .

" என்ன... நா வந்து குளிக்கணுமா.. " எனவும்..

திகைத்த அவள் பார்வையில் , மெல்லிய சிரிப்பை உதிர்க்க துடிக்கும் இதழ்களை மறைத்து , " சீக்கிரமா வா... உனக்காக நான் ஒருமணி நேரமா வாட்ச்மேன் வேலை பாத்துட்டு இருக்கேன் " என்று கடுப்பாக அவன் கூறினான் .

ம்.. என்று தலையாட்டியவள்... தயக்கமாக , " மித்ரன் ஸார்.."  என்று அழைத்தாள் . கதவை சாற்றப் போனவனின் கைகள் அப்படியே அசையாமல் என்ன என்று பார்வை வீச.. " எ..னக்கு துணி.."  என்று அவனிடம் மெல்லிய குரலில் கேட்டாலும்.. அழுகையில் வெடிக்க தயாராகவே இருந்தாள் . ஒற்றை புருவம் மட்டும் மேலேற்றி.. பதில் பேசாமல் கதவை அடைத்து விட்டான் .

ஓவென்று இருந்தது அவளுக்கு.. அடுத்த சில நொடிகளிலேயே.. அவன் குரல் தேனான செய்தியை கொண்டு வந்து சேர்த்து போல் , " உன் ரயிட் ஹேன்ட் சைட்ல பாரு.. வாட்ரோப்ல டவல்ஸ் இருக்கும்.. யூஸ் பண்ணிக்க.."  என்றான் .

" நனைச்சு விடாம இருந்திருந்தா.. நான் இதையே போட்டு இருந்திருப்பேன்" என்று புலம்பயவளாக.. அவன் சொன்னதை செய்தாள் .

முதலில் , ' அய்யோ.. வெறும் துண்டால்லா இருக்கு.. ' என்று வாய்விட்டே புலம்பி.. அதில் தன்னைச் சுற்றிக் கொள்ள.. அது கொலுசுக்கு அரை இன்ச் மட்டுமே மேலாக.. நன்றாக நீண்டு இருந்தது . " ஷப்பா.." என்று நினைத்து தோளை சுற்றி மற்றொன்றை எடுத்து போர்த்திக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்து வெளி வர... அவன் இருக்கும் அறிகுறியே தென்படவில்லை .

திடீரென்று பின்னிருந்து , " ம்.‌. பரவால்ல‌‌.. இதுவே நல்லா இருக்கு.. நீ கிளம்பு.. " , என்று அலுங்காமல் குலுங்காமல் அடுத்த குண்டை எடுத்துப் போட.. இதுவரை அவன் முன் அழுகாமல் இருந்ததவளுக்கு.. அடக்கும் வழி இப்பொழுது தெரிந்திருக்க வில்லை . இருந்த இடத்திலேயே மடங்கி அமர்ந்தவள்‌.. தன் முட்டியின் மீதே முகத்தை மறைத்து ஓ‌‌..வென.. குலுங்கி குலுங்கி அழுகவும்... இதை கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now