வா.‌. வா.. என் அன்பே - 77

945 34 12
                                    

பகுதி - 77

' மித்ரன்..',  என்று அவள் அறியாமல் இதழ்கள் உதிர்த்து இருக்க.. அந்தகணம் அவனது கண்கள் சிவந்திருந்த நிலையை கண்டு.. ஓர் அடி பின்னே , தாமரை நகர்ந்திருந்தாள் .

" நீ என்ன நோக்கத்தில.. என் லைஃப்ல நுழைஞ்சு இருக்கேன்னு தெரியாது.. ஆனா , கண்டிப்பா அது எதுவும் , இந்த ஆர். பீ. எஸ்கிட்ட.. எப்பவும் தடவை பலிக்காது.. புரிஞ்சதா.. நம்பவச்சு கழுத்தறுத்திட்ட.. ", என்று விஷமாய் தொய்த்த வார்த்தைகளை விசிறியடித்து திரும்பி செல்ல.. உள்ளுக்குள் நொறுங்கியவளாகவே இருந்தாலும் , மின்னல் வேகத்தில்.. அவன் முன்னால் சென்று நின்றவளாலும் ,  ஏற்றுக் கொள்ள முடியாததாய்.. ' தன் மீது இருக்கும் நம்பிக்கை அவ்வளவு தானா..' என்று மறுகித்  தடுமாறியவள்.. சட்டென்று , உற்பத்தியான கண்ணீரை உள்ளிழுக்க போராடியவளாய்.. அவனை மறித்தவளாக ,

" எ..ன்..ன.. என்ன பேசுறீய.. மி..", என்று முழுமையாக வாய் திறப்பதற்கு முன்பாகவே.. அடைத்திருந்தான் . ' அவ்வளவு தானா..', என்று ஓய்ந்தே போனவளாய்.. சரணின் இதழுக்குள் வதைப்பட்டிருக்கும் , தன் இதழை இழுத்துக் கொள்ளவும் விருப்பம் இல்லாமல்.. உயிர் வலியை புதைத்து.. அப்படியே நின்றிருந்தாள் .

அவன் தன் இதழ்களின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கோபத்தை தாங்கி நின்றிருந்தவளுக்கோ , அவள் இதயம் வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருந்தது . இவ்வளவு நாள் சேர்ந்து வாழ்ந்தற்கு உண்டான அர்த்தமே மடிந்தது போல்.. "என்னைய உங்களால நம்ப முடியலையா..", என்று மறுகிக் கொண்டிருந்தவளின் மனமோ , ஊமையாய் அழுதுக் கொண்டே இருக்க.. அசையாமல் நின்றுவிட்டாள் .

' எவ்வளவு தைரியம் இருந்திருந்தால்.. ', என்றதற்கு மேல் அவனால் தன் சிந்தனையையும் தொடர முடியாமல்.. அழுந்த புதைந்திருந்த இதழில் வெளிப்படுத்தித் தண்டித்துக் கொண்டிருந்தான் . இதற்கு முன் சரணின் , வன்மையான தீண்டலை கண்டிராதவள் அல்ல.. ஆனால் , இன்று கொடுக்கும் முத்தத்திலும்.. எலும்புகளே உடைப்படும் அளவிற்கு அணைக்கும் அணைப்பிலும் , கடுங்கோபம் மட்டும் அல்ல.. முழு வெறுப்பை மட்டுமே உணர்ந்திருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now