பகுதி - 52
இடையில் கட்டிய ஒற்றை துண்டுடன்.. தன் மனைவியின் மீது குறும்பு விழிகளால்.. குறுநகை புரிந்து கடைசியாக அவன் கேட்டது.. எதுவும் , அவளை சென்றடையவே இல்லை .
வியப்பு.. வியப்பினால் உண்டான அதிர்வு.. கருவண்டு விழிகளில் அதை தவிர எதுவும் தென்படாமல் இருக்க.. மென்மையாக , அவளை மேலும் தனக்கு இழுத்தாலும் , பேசிய ஒருமணி நேரத்திலோ , ஒரே நாளிலோ.. அவளிடத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.. என்று நினைப்பதே மடமை என்று புரிந்துக் கொண்டான் .
ஆடவனுக்கோ.. மனைவியின் நெருக்கம் , உடலில் வெப்பத்தை அதிகரிக்க செய்திருந்ததில் , தன் உணர்வுகளை வெளிப்படுத்த.. அவளது அதீத பதற்றமும்.. தவிப்பையும் கண்டவனோ..
" அவ இருக்க நிலைமைக்கு உனக்கு ஏன்டா புத்தி இப்படி போகுது..", என்று மனசாட்சி இடித்துரைத்ததோடு அல்லாமல்..
" இவள பார்த்த நாளில் இருந்தே.. நீ தப்பு தப்பாதான்டா பண்ற. " மீண்டும் வரிந்துக் கட்டிக் கொண்டு வர.. ' நீ போடா டேய்.. எனக்கு தெரியும் என் பொண்டாட்டிய பார்த்துக்க..' என்று ஒரே மிதியாய் மிதித்து ஏத்தித் தள்ளியவன்..
தாமரையை , அதே ஆதுரமான அணைப்போடு படுக்கைக்கு கூட்டிச் சென்று.." தாமரை.. வா எதையும் யோசிக்காம தூங்கலாம்..", எனவும் , சமத்து பிள்ளையாய் படுக்கையில்.. அவன் கூறுவதை கேட்டு தலை சாய்ந்தாலும்.. பற்றிய அவன் கரத்தை விடாமல் உதடு பிதுக்க..
" ம்ச்சு பாப்பா.. என்ன டி இது.. காதலிக்கிறேன்னு சொன்னது ஒரு குத்தமா..", என்று அவன் வேதனையை மறைத்தவனாய் கேலியாக கூறுவது போல் கூறி.. அவள் அருகே , தானும் படுத்து.. தன் மேல் போட்டுக் கொள்ள.. அப்படியே , பசை போல் ஒட்டிக் கொண்டாள் .
முடி.. காடு போல் சுருண்டு வளர்ந்திருந்த நெஞ்சத்தில்.. தன் கன்னத்தை அழுத்தமாக பதித்து.. கடைவிழியோரம் , சூடாய் வழிந்த கண்ணீரோடு எப்பொழுது உறங்கினாள் என்றே தெரியாமல் உறங்கியிருக்க.. பெண்ணவளின் துடிப்பு.. நொடிக்கு நொடி ஆடவனை அதிகமாக சிந்திக்க தூண்டியது. இப்படியே , எவ்வளவு நாள் அவளை தாழ்விறக்கத்திலேயே வைத்திருக்க முடியும்.. என்று தன் மனைவியை பற்றிய யோசனையிலேயே பொட்டுறக்கம் வரவில்லை .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...