வா.. வா.. என் அன்பே - 48

1.3K 47 22
                                    

பகுதி- 48

சரண் தன் மனைவியை விடியல் வரை.. அவளைவிட்டு விலகி இருக்கவில்லை .. நெஞ்சம் முழுவதும் , காதல் நிரம்பி வழிய.. அந்த காதலால் காமமும்.. இனித்தது.. ஒவ்வொரு முறையும், அவளுடைய பெண்மையோடு இணைந்து.. அவளை நிறைக்கையில்.. உலகையே வென்ற கர்வம் கொண்டான் . மனைவியின் அனுசரணையும் , ஓயாத அவன் தேடலுக்கு.. அதிகம் துவண்டாலும் , தாங்கிக் கொண்டவளின் செயலும்.. அவளை மென்மையாக கையாண்டாலும் , விலகியிருக்க முடியாமல் தடுமாறினான் என்றாலும் மிகையில்லை..

"பாப்பா.. பாப்பா..", என்று வாய் ஓயாமல்.. பிதற்றியவனின் கரங்களில் இருந்த மென்மையான வருடல்.. தாயின் தடவலை நினைவுப்படுத்த.. தாமரையும் , விலக மனமற்றவளாய்.. மிகவும் , அழுத்தமாகவே.. அவன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டவள்.. முகத்தை.. இடமும் வலமுமாய் தேய்த்துக் கொண்டு வருடலை ரசித்திருக்க.‌‌. ஆடவன் , நிலையே அதிகம் பரிதாபமாகியது .

ஏற்கனவே , அதிகமாக அவளை துவள செய்திருந்ததில்.. அவனே , தன்னை கட்டுப்படுத்தியவனாக.. இருந்தால்.. நாய்க்குட்டிப் போல்.. உரசி.. தன்னை அதிகமாக சோதனைக்கு உள்ளாக்குபவளை விலக முடியாமல் தடுமாற.. "என்னடீ பாப்பா.. இப்படி உரசி சீண்டற.. ", என்று வெளிவராத குரலில் முனங்க.. அந்த மெல்லியாளோ.. அவன் வருடலால் எப்பொழுதோ உறங்கி இருந்ததில்.. அவனுடைய தாபமான குரல் தீண்டாமலே போனது . அதை கவனித்தவனுக்கோ , "பாப்பானாலும் பாப்பாதான்டீ.. நீ..", என்று கன்னம் கிள்ளி தனக்குள்ளாக செல்லம் கொஞ்சியவன்.. தன் மேல் படர்ந்திருந்வளை , மெதுவாக.. மெத்தையில் சரிக்க முயல.. தாமரையோ , தூக்க கலக்கத்திலும்.. புரட்டிப் போட்ட உடல்வலியாலும்.. தன்னை அறியாமலேயே.. கிடைத்துக் கொண்டிருக்கும் , வருடல் சுகத்தை இழக்க விரும்பாமல்.. ' ம்.. ம்ஹும்..', என்று சிணுங்கிக் கொண்டே.. விலகாமல் ஒட்டிக்கிடக்க.. சரணோ.. அதிக பரிதாபத்திற்கு உள்ளானான்.

" அடியேய்.. பாப்பா.. இப்படி எல்லாம் பண்ணாத டீ.. நீ பாவம்ன்னு இருக்குறவனை.. இப்படி உசுப்பி விடுற..", என்று உறங்கும் குழந்தை மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க.. அவளை எட்டியிருக்கும் போலும்.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போதும்.. அழகாய்.. வளைத்துக் கொள்ளவும்.. அதற்கு மேல் முடியாதவனாக.. அவளை அப்படியே , ஆக்டோபஸ் போல் சுருட்டி கொண்டான்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now