வா.. வா.. என் அன்பே - 85

1K 39 8
                                    

பகுதி - 85

சரணின் கவனம் முழுவதும் தாமரையிடத்தில் இருக்க.. ஆரவ் அவளுடன் இருப்பதை உடனே கண்டுக் கொண்டான் .  ஒற்றை புருவம் மேல் உயர்த்தியவன்.. கூர்மையுடன் அவர்களை கவனிக்க.. விழிகள் மின்ன புன்னகையுடனே உரையாடிக் கொண்டிருந்தாள் ‌. ஆரவ் வீடு தேடி வந்த அன்று , அரண்டவளாக நின்றிருந்ததற்கும் , இப்பொழுது , மலர்ந்து இருக்கும் அவளது முகமும்.. பல யோசனைகளை தூண்டிய போதும்.. உடனடியாக , அவள் அருகே சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமே மேல் எழ.. அவ்வளவு தான் , நொடியும் தாமதியாமல் அவளிடம் விரைந்திருந்தான் சரண் ‌. சீண்டும் பார்வையுடன் அவனையும் ஆரவ் கடக்க.. இரண்டே எட்டில் மனைவியை நெருங்கி இருந்தவன் .

" இங்க என்ன பண்றீங்க.." , என்று ஒதுக்குப்புறமாய் நிற்பதை விசாரிக்கும் தோரணையே ' ஏன் இங்கு வந்தாய்..', என்பதான கண்டனம் ஒளிந்திருந்ததாய் . , ஆரவ் சென்ற திசையை சுட்டிக்காட்டியவனாய் ,  ' அவன் எதுக்கு வந்தான்..', என்று கண்களால் மனைவியை சினந்துக் கொள்ள‌.. அதனை புரிந்துக் கொண்டவளுக்கோ.. உள்ளுக்குள் உதறல் அதிகமாக எடுத்திருக்க.. இருந்த போதும் ,

" அது.. புடவை அட்ஜெஸ் பண்ற மாதிரி இருந்ததுன்னு அக்கா கூட்டீட்டு வந்தாங்க..", என்று திக்கித் திணறி அவள் கூற‌. மறந்தும் ஆரவ் பற்றிய வினாவிற்கு தெரியாதது போல் பதில் அளிக்காமல் அமைதியாக.. மனதின் உதறலையும் வெளிக்காட்டாமல் , அழுத்தமாக ப்ரியாவின் மணிக்கட்டையும் சேர்த்தே பிடித்து , " எதுவும் சொல்லாதே..", என்று விழிகளால் கெஞ்சியவளாக இருந்ததில்.. அவளும் மௌனமாய் நின்றிருந்தாள் .

" மச்சி.. இவளை தனியா விட வேண்டாம்.. பார்த்துக்கங்க.. ப்ளீஸ்..", என்று தன்மையாகவே ப்ரியாவிடம் கேட்டுக் கொண்டவன்.. " ப்ளீஸ்.. ", என்று தனிமை அளிக்க கேட்க.. சன்ன சிரிப்பை உதிர்த்தவளாக.. சில அடிகள் அவர்களை விட்டு தள்ளி நகர்ந்திருந்தாள் .

ப்ரியா தள்ளிச் செல்லவுமே , "எதாவது ப்ராப்ளம் பண்ணினானா..", என்றான் .

" இல்லை..",

உஃப் என்று காற்றை வெளியேற்றி..
" கப்பிள் பிக்காக கூப்பிட்றாங்க.. நீ இப்படி முகத்தை வச்சிருந்தா.. என்ன அர்த்தம்.. ம்.. நீ என் வைஃப்னு சொல்றது அவ்வளவு கஷ்டமான விஷயமா இருக்கா.. என்ன.. ", என்று குனிந்து விறைப்புத் தன்மையுடன் வினவ..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now