வா.. வா.. என் அன்பே - 39

1.4K 44 13
                                    

பகுதி - 39

சரணின் இத்தகைய செயலை எதிரே பார்க்காத தாமரை.. படுக்கையில் விழ.. முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொண்டு தீண்டாமல் சீண்டிக் கொண்டிருப்பவனின் செயலால்.. பேசாமல் இவன் முத்தம் கொடுத்திருந்தாலும்.. இப்படி உணர்ந்திருக்க மாட்டோம் என்று உள்ளுக்குள் புலம்பியவளாய்..  கண்களை இடமும் வலமும்.. உருட்டி விழித்துக் கொண்டிருந்த அழகில் மதி மயங்கியவன்..

" பாரு.. உனக்காக , ரூம்லேருந்து சுடியெல்லாம் எடுத்து வந்துட்டேன்.. ஆனா , நீ வேண்டாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..", என்று குரலில் கடுமையை பூசிக் கொண்டு.. அவள் தவிப்பை ரசிக்க.. முதலில் மிரண்டவள்.. பின் கேலியை உணர்ந்து..

" நானே மாத்திக்குறேன்.. ", என்று முனங்கினாள்..

" ஏன்..", என்று அவன் நிலையில் இருந்து மாற்றம் இல்லாதது போல் தோன்றினாலும்.. மேலும் நெருங்கியிருப்பது போலவும் இருக்க..

" எ..ன்..ன .. ஏ..ன்..", என்று கேட்டவளின் குரல் சென்ற இடம் தெரியாமல் இருக்க..

" பா.. ப்..பா.. ஆ..", என்று குழைந்து ஒலித்த குரல் தனது தானா  என்ற சந்தேகம் அவனுக்கே எழும்பொழுது.. அவளை கேட்கவும் வேண்டுமா..

" ம்..", என்று அவனுக்கு குறையாத முனங்களை வெளியிட்டிருந்தாள்..

" ஏன் வேண்டாம்ன்னு சொல்ற.. நான் வேண்டாமா..", என்று கூறியவன்.. அவளது கன்னத்தோடு இழைய.. தாடி ஏற்படுத்திய குறுகுறுப்பில்.. படுக்கையின் விரிப்பை அழுத்தமாக பிடித்து.. கண்களை இறுக்கமாக மூடி , கன்னத்தை சாய்த்துக் கொள்ள.. அவன் கூறியது எதுவும் மூளைக்கு சென்றடையவே இல்லை.. இதுவரை , ஒரு பெண்ணிடத்தில் அவன் காணாத தவிப்பும் நாணமும்.. ஒவ்வொரு முறையும் அவளிடத்தில் தூண்டுகோலாக இருக்க.. கன்னம் , காது.. என்று உரசியவன்.. மீண்டும் இதழின் அருகே வந்து தீண்டாமல் இம்சித்துக் கொண்டிருந்தான்.. அவளோ , அவள் நிலையிலேயே இல்லை.. மாலை நேரத்தில் , பேயாட்டம் போட்ட உணர்வு மீண்டும் தலை தூக்கியது போல் இருக்க.. அதன் காரணம் அறியாதவளாய் , மயங்கிய விழிகளை திறக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.. சரண் தீண்டாமல் தீண்டிக் கொண்டிருந்த செயலால்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now