பகுதி - 8
விக்கிக்கோ... அவள் அழைத்த 'அண்ணே' என்ற சொல்லே , அடுத்த அடியை எடுத்து வைக்கவிடாமல் கட்டிப் போட்டது என்றால் ... மேற்கொண்டு கூறியதில் முடிவெடுத்து , பயங்காட்டுவதை நிறுத்தி அமர்ந்துவிட்டான் .
" யார் நீ ? " என்று ஆத்திரத்தை அடக்கியவனாக கேள்வி கேட்டவனை.. அஞ்சி நடுங்கியவளாக கூறத் தொடங்கினாள் .
அவள் நிலையை கேட்டால் கல்லும் கரையும்.. விக்கி ஊனும் உயிரும் கொண்டவன்.. அவன் இளகாமல் இருப்பானோ.. அதுவரை கடைப்பிடித்திருந்த அதிகாரத்தனத்தை கைவிட்டவனாக.. மடித்து அமர்ந்து கதறி துடிப்பவளை பார்ப்பதற்கே , அவ்வளவு பரிதாபமாக இருந்தது . பாவம் , சிறுபெண் வயதிற்கு அதிகமான சோதனைகளை தாங்கிக் கொண்டுயிருக்கிறாள் என்றே தோன்றியது .
நேற்று வரை நடந்ததை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியவள் , சரண்மித்ரனை பற்றி மட்டும் வாயே திறக்கவில்லை . பணம் தருவதாக கூறினார் என்றதோடு முடித்துவிட்டாள் .
இந்த கணம் வரை அவன் அவளிடம் நடந்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும்.. பேதைக்கு ஏனோ , அடுத்தவர்களிடம் விட்டுக் கொடுக்கத் தோன்றவேயில்லை . தவறானவனாக சித்தரிக்கவும் விரும்பவில்லை . அவள் அறிந்த சரண்மித்ரன் இப்படிப்பட்டவன் அல்ல.. அதுமட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் இருக்கலாம் .
தன் தலையை முட்டியில் வைத்து முகத்தை மறைத்தை அழுது துடிப்பவளின்.. அருகே சென்று , மென்மையாக தலையை கோத.. வெடுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகளில் நிறைந்து வழிந்த வலி.. விக்கியை பெரிதும் திருப்பிப் போட்டது .
" ஷ்..ஷ்.. பயப்படாதம்மா.. நீ யாருன்னு தெரிஞ்சுக்க தான், இப்படி நடந்துகிட்டேன்.. நீ பயப்படுற மாதிரி நா கெட்டவன் இல்ல.. சரண் உன்ட்ட பணம் கொடுக்க சொல்லியிருக்கான் . என்ன காரணம் சொல்லலை.. பெரிய தொகை அதான்.. நீ பயப்படாத சரியா.. உனக்கு ஹெல்ப் பண்ண சொன்னான். அதுவும் இல்லாம தூங்கிற உனக்கு காவல் காக்க சொன்னதுல ரொம்பவே கடுப்பாயிட்டேன் . ஐயம் ஸோ ஸாரி ஸிஸ்டர்.." , என்று மென்மையாக சிரிக்க..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...