111

1K 51 11
                                    

பகுதி - 111

எதிலோ , படித்த நினைவு உண்ணும் உணவில் கூட அறுசுவைகளும் சுவைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்  . ஆனால் , மணவாழ்க்கையில் மட்டும் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்து இருக்க வேண்டும் என்று எண்ணினால் , வாழ்க்கை சுவைக்கவும் செய்யாது.. சுவாரஸ்யமும் குறைந்துவிடும் என்பதை பலர் மறந்துவிடுகிறோம் போலும் ...

மான்சியின் வீட்டிற்கு சரண் தாமரையை தேடி வந்து , பதினைந்து நாட்கள் நொடிகளாய் கடந்து இருக்க.. இந்த பதினைந்து நாட்களில் தன் அதிரடியால் பல மாற்றங்களையும் நிகழ்த்தி , தாமரையையும் அவனோடு அவர்களது வீட்டிற்கும் வர வைத்து இருந்தான் சரண் மித்ரன் .

அந்தி வானம் மயக்கங் கொள்ளச் செய்யும் மாலைப்பொழுதில் , கண்களில் குறுஞ்சிரிப்புடன் தாரா , அவளது கண்களில் காஜல் வைத்துக் கொண்டு இருக்க.. அவள் பின்னால் ஆண் அழகனாய் கருப்பு வெள்ளை கோர்ட் ஷுட்டில் முறைத்தவாறு தன் இரு கரங்களையும் பேன்ட் பேக்கெட்டிற்குள் பொறுத்தியவனாக நின்று இருந்தான் ரிச்சர்ட் . அதில் , மேலும் தன் வெண்ணிற பற்கள் பளிச்சென்று தெரிய சிரித்த தாரா ,

" ரிச்சா.. நான் அழகுன்னு எனக்கே தெரியும்.. அதை நீ வேற இப்படி வெறிச்சு பார்த்து காட்டணுமா.. ", என்று கேலி பேச..

" அறைஞ்சேன்னு வை.. தெரியுற பல்லு அத்தனையும் கொட்டீடும்..', என்று நறநற என்று கடித்துக் குதறியவனாய் சொல்லவும் , படார் என்று அவன்புறம் திரும்பியவள் ,

"அவன் செய்யுற வேலைக்கு நான் என்ன பண்ணுவேன் ரிச்சா.. என்னைய முறைச்சா..", என்று மீண்டும் உதட்டுச் சாயத்தை கரத்தில் எடுத்தவளாக , வேலையை தொடர முற்பட..

" உன் ஃப்ரெண்ட் அந்த புள்ளைய பாடா படுத்துறான் டீ.. ஏன் இப்படி பண்றான்னு நீயாவது ஒரு வார்த்தை பேசலாம்ல.. நீ என்ன டான்னா.. ஈ..ன்னு இழுச்சுட்டு என்னையே வெறுப்பு ஏத்தீட்டு இருக்க..", என்று அவன் தொடர்ந்து கத்தவும் ,

" ஸ்.. ஷப்பா.. என்னால சத்தியமா முடியலை.. முடியவே இல்லை.. சொல்லீட்டேன்.. இன்னைக்கு எனக்கு அவார்ட் ஃபங்ஷன்.. சந்தோஷமா கிளம்பி வரானா பாரு.. அவன் ( சரண்) அவனோட வைஃபை வச்சு செய்றதுக்கு.. இவன் என்னைய நல்லா வச்சு செய்யுறான்.. கீப்ட் அப்..", என்று அவர்களது அறையில் இருந்து , அவனது பேச்சையும் காதில் வாங்காதது போல் வெளி வர.. ஆரா , தன் வெண்ணிற கௌனில் தேவதையாய் மிளிர்ந்து வெளி வந்து இருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now