பகுதி - 71
சரண் குரலில் ஒளிந்திருந்த சினமும் அலைபேசியின் வாயிலாக தெரிந்துக் கொண்ட தகவலும் அதிகமாய் அவளை மிரள செய்திருந்த போதும்.. இம்மியளவும் அவனிடமிருந்த விழிகளை அகற்றாமல் தனக்குள்ளாகவே போராடிக் கொண்டிருந்தாள் என்றாலும் மிகையில்லை .
அவனுடைய மனைவி என்று அறிந்ததும்.. அதிகமாக பரணி பேசிய விதத்திற்காக தடுமாறினாலும்.. பின் , அதனை வெளிக்காட்ட விரும்பாமல்.. நடிக்க அழைப்பு விடுக்க..
" ஓகே அங்கிள்.. அவங்களுக்கு விருப்பம் இருந்தா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.. நான் கேட்டு சொல்றேன்.. " என்று சொல்லி வைத்தவன்..
" பரணி அங்கிள் உன்னை அவர் டீம்ல நடிக்க முடியுமான்னு கேட்குறாங்க.." என்று சொல்லியவன் அழுத்தமாக ஏறிட..
தாமரையின் நினைப்பு மொத்தமும் தன்னவனின் செயலில் மட்டுமாக இருந்தது.. அது எப்படி அவளுடைய ஒவ்வொரு அசைவையும் இவ்வளவு துள்ளியமாக பதிவு செய்திருக்க முடியும் என்பதிலேயே சுற்றி வர.. அப்படியானால்.. என்று எழும் கேள்விக்கு மனம் பதில் தேடியலைய.. எதிர்பார்ப்புடனும் விழிகளில் படர்ந்த யாசிதப்போடு நின்றிருக்கவே.. அதனை அலட்சியம் செய்ய நினைத்தவனாக எழுந்து நகர முயல ,
" பதில் சொல்ல மாட்டீயளா.. " என்று வெளி வந்தவளின் குரல் அவன் உயிர் வரை தீண்டி இம்சித்து.. அடுத்த அடியை எடுத்து வைக்க விடாமல் செய்ததில் , சிறு விறைப்பை வெளிப்படுத்தியவனாக நின்றுவிட்டான்.
மெல்லிய எட்டுக்கள் வைத்து நெருங்கியவளின் கண்களில் வழிந்த அலைப்புரிதலில்.. சற்று நிதானத்திற்கு வந்தவனாய் ,
" என்ன சொல்லனும்.. நான் சொன்ன உடனே நம்பவா போற.. ", என்று ஏளனமாக உதடு சுழித்து நகர முயல..
அவன் மணிக்கட்டை பிடித்து இழுத்து நிறுத்தியவளிடம்.. " மச்சு.. இப்ப என்னதான்டீ வேணும் உனக்கு... உன்னை பார்த்த நொடியில் இருந்து உன் மேல பைத்தியமா இருக்கேன்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. நீ நம்ப தயாரா இல்லை.. நம்ப போறதும் இல்லை.. " என்று உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்.. எரிந்து விழ.. பெண்ணவளின் கருவிழிகள் இரண்டும் அலைபாய்ந்து.. வேறு எதையோ , யாசித்து காத்திருந்ததில்.. தன் வலக்கரத்தால் பின்னங் கழுத்தை அழுத்தமாக கோதியவன்..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...