வா..வா.‌. என் அன்பே - 30

1.5K 38 18
                                    

பகுதி - 30

இருவருக்கும் இடையில் விழுந்த, மான்சி சரணின் விவாகரத்து பத்திரம்.. அத்தோடு , ஒரு பென்டிரைவ்.. அதில் விடுப்பட்டவன்.. அவளை விடுத்து கீழே விழுந்ததை மனம் கனக்க எடுத்து , அதே இடத்தில் விட்டெறிந்தவனால் , பென்ட்ரைவை எறிய முடியவில்லை போலும்.. பொறுக்கி எடுத்ததை.. தன் கரத்திற்குள் வைத்து அழுத்தமாக பற்றியவன்.. அவளை ஒரு பார்வை பார்த்து..

" ம்ஹும்.. நான் ஒரு முட்டாள்ன்னு சொல்லாம சொன்ன ரெண்டு பேரோட அடையாளம்.. ஒன்னு அழகான உருவம்.. மான்சியின் புகைப்படத்தை பார்க்க.. மற்றவள் , என்று தன் கரத்தை பார்த்து அழகான இந்த குரலுக்கு சொந்தக்காரி", என்றவனாக.. வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தக் கொண்டான் .

கேட்ட தாமரைக்கோ.. தன் தலையில் இடி விழுந்த உணர்வு.. தான் பாடி , அவனை தெரிந்தே ஏமாற்றியதாக நினைத்தவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. " என்னையால.. உங்கள ஏமாத்த முடியுமா..", என்று கண்ணீர் வடித்தவளுக்கு தெரியாமலே போனது.. மான்சியைவிட , அதிகமான அவனுடைய கோபம் அந்த குரலுக்கு சொந்தக்காரியின் மீதென்றே என்று..

குளியல் அறையில் இருந்து , அவன் வெளிவந்த பிறகும்.. அவள் நின்ற நிலையில் இருந்து மாற்றம் இல்லாமல் போகவே ,

" ஏய்.. என்ன மரம் மாதிரி நின்னுட்டு இருக்கே.. சீக்கிரமா கீழ வா.. பசிக்குது.. " என்று கூறிய பிறகே , அவளுக்கு உயிர் வர.. வேகமாக அவள் குளியல் அறைக்குள் நுழைந்து விட்டாள் .

சிறு குளியல் போடலாம் என்று யோசித்தவளுக்கு, கோவில் சென்று வந்தது நினைவு வர.. கை கால்களை மட்டும் கழுவியவளாக.. உடையை மாற்றலாம் என்று வெளி வருவதற்குள்.. சரண் சென்றிருந்தான் .

சரண் ,குடும்ப அங்கத்தினர்களோடு அமர்ந்து தங்கையோடு பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே , வாயிற் காவலாளிகளில் ஒருவன்.. அடித்துப்பிடித்து.. ஓடி வந்தார்.

" ஸார்.. வெளில ஒரு பையனும் பொண்ணும்.. உங்கள பார்க்கணும்னு அடம் பிடிக்குறாங்க.. நீங்க தான் வீட்டுக்கு வர சொன்னீங்களாம்.. மச்சீன்னு சொல்லு அவரே கூப்பிடுவாருன்னு.. " என்று இழுக்கவும்..

வா.. வா... என் அன்பே...Donde viven las historias. Descúbrelo ahora