வா.‌ வா.‌ என் அன்பே - 23

2.1K 36 11
                                    

பகுதி - 23

மாடியேறி வந்த சரணிற்கு.. தாமரையின் சிரிப்பும்.. தன் அறையில் கண்ணெதிரே இருக்கும் மனைவியான மான்சியின் நினைவையும் புறந்தள்ள முடியாமல் தத்தளிக்க.. உடலில் இருக்கும் சக்திகள் அனைத்தும் வடிந்தது போல் இருக்கவே.. அப்படியே விடியலின் புத்துணர்ச்சி சிறிதுமின்றி படுக்கையில் சரிந்துவிட்டான் .

தன் கண்ணெதிரே இருப்பவளை மனைவியென்ற நினைப்பில் இருந்து விலக்கிக் வைக்க முடியாமலும்.. அதேசமயம் சற்றுமுன் தாயும் பாட்டியும் பேசியதுமே‌‌.. நினைவில் ஆட.. பெரிதும் குழம்பியவனாய் இருந்தான்..

தோட்டத்தை சுற்றிக் கொண்டு வந்திருந்தவனின் செவிகளில்.. "அத்தை.‌. நிஜமாவே.. இந்த பொண்ணோட சரணுக்கு பழக்கம் இருக்கா.. இல்ல நமக்காக.." என்று தடுமாறியவரின் குரலில் அதிர்ந்தவனாய்.. கவனிக்க..

" மயூ‌.. பழக்கம் இல்லாமலா.. தாலி கட்டிறதுக்கு முன்னாடி அவ பதிலை எதிர்பார்த்துட்டு இருந்திருப்பான்.. நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத.. " என்ற கண்டிப்பால் மயூரி தெளிந்தார் என்றால்.. சரண் அதிகம் குழம்பித் தவித்தவனாய் இருந்தான் .

மான்சியை தவிர அந்த உறவிற்குள் வேறொரு பெண்ணை நிச்சயமாக நுழைக்க முடியாது என்பதாலேயே.. தவிர்க்க முடியாமல்.. ஒருவளை மனைவி என்ற பெயரில் அழைத்து வர முடிவு செய்தான்.. அதுவும் தன் வாழ்நாள் முழுவதும் பாரீஸ் என்பதாலேயே.. தனது பாட்டியிற்காக.. இந்த செயலை செய்ய நினைத்திருந்தான்.. அந்த குடும்பத்தில் உள்ளவர்களில் தாத்தாவும் பாட்டியையும் தவிர.. அவனின் மீது எந்த தவறுமில்லை என யாரும் நம்பியிருக்கவில்லை. அந்த ஒற்றை செயலின் காரணமாகவே.. தன் வாழ்கையில் பொய்யாய் தாமரையை அனுமதித்திருந்தான்.

ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளாக.. திருமணத்தை அவர்களே நடத்தி வைத்திருப்பது போதாதென்று.. இது போன்ற ஆராய்ச்சிகளும் இடம் பெறவே.. தாமரையின் மீது கட்டுக்கடங்காமல் கோபம் பெருகியது. அவள் மட்டும் இயல்பாக நடந்திருந்தால் இது போன்ற.. சந்தேகங்கள் கிளம்பியிருக்க வாய்ப்பேயில்லை என...

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now