பகுதி - 2
தன் கை முஷ்டியை இறுக்கி.. நின்றிருந்தவனின் தோற்றத்தில் , அப்படியொரு கோபம் . அதை வெளிப்படுத்த முடியாத இயலாமை . உடனே , வேகமாக செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேற.. முயன்றவனை தடுத்து நிறுத்தி , அழைத்து வருவதற்குள் , உண்டது அனைத்தும் செறித்திருந்தது அவன் நண்பனான விக்கிக்கு .
" அதுக்கு குடிச்சா எல்லாம் சரியாச்சா... " என்றவனின் குரலில் , சரணை மிஞ்சிய கோபம் இருக்க , அமைதியாய் ஏறிட்டவனிடம் , தாங்கிக் கொள்ள முடியாமல் ,
" பாரு... நல்லா பாருடா... இந்த ஒரு வருஷத்துல.. அவ... எப்படி இருக்கா... நீ எப்படி இருக்கேன்னு பாரு... " என்று கண்ணாடியையும் , அவன் விட்டெறிந்த காகிதத்தையும் சரண் முன் போட , அசையாமல் நின்றிருந்தான் .
" இங்க பாரு சரண் , இவ்வளவு நாள் எப்படியோ ? ஆனா , இனிமேலாவது.. பெத்தவங்கள குடும்பத்தை யோசி..." என்றதும்... ம்ஹூம்., என்று விரக்தியாய் சிரிக்க.. அதில் சுதாரித்த விக்கி
" சரி வேண்டாம்... உன்னை யோசி.." என்றான் .
என்ன என்பது போல் பார்த்தவனை , அசையாது நோக்கி... " நீ தோத்து அவள ஜெயிக்க வைக்கப் போறியா ?" என்றவன் கேட்க...
விழி சுருக்கி நின்றான் ஒழிய.. வாய் திறவாமல் இருக்கவும்.. " போராட்டம் நிறைந்தது தான்டா வாழ்க்கை... அதில ஜெயித்து வரவன் தா நிஜமான ஆம்பள... இல்ல... உங்க பாஷைல சொல்லணும்னா... ஹீரோ... அவளுக்கு இருக்குற தைரியம் கொஞ்சமாச்சு , ஆம்பள உனக்கு இருக்காடா..." என்று கூறியவனின் கழுத்துச்சட்டை சரண் கரத்தில் மாட்டியிருக்க...
" அடிடா... நல்லா அடிடா... ஏன் ஓங்குன கையை அப்படியே இறக்கிட்ட... சொல்லு... அடுத்தவங்களுக்கு பயந்தா நம்மால வாழவே முடியாது... இந்த ப்ரஸ் மீடியான்னு பயந்துட்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஊர் ஊரா தண்ணியடுச்சு சுத்தீட்டு இருக்கப் போற... ஒரு பொண்ணு.. அவளுக்கு இருக்க துணிச்சல் கொஞ்சமாச்சு உனக்கு இருக்கா ? பாரு எவ்வளவு அசால்ட்டாக... காதுல வாங்காம... நக்கலா பதில் சொல்லிட்டு போறா ! அவளை கேக்காததையாடா... உன்ன கேக்கப் போறானுக... இல்ல தெரியாம கேக்குறேன்... இந்த தொழிலில்ல இதெல்லாம் சகஜம்ன்னு தெரியாதவனா நீ..." என்று விக்கியும் நிறுத்தவில்லை...
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...