பகுதி - 65
தான் நினைத்ததை விடவும் வேகமாகவே , வந்த வேலை முடிந்திருக்க , இதழ் ஓரத்தில் துடித்த புன்னகையுடன் வெளியேறினான்..
சரண் எவ்வளவு அதிரடியாக , அந்த நடிகையின் வீட்டிற்குள் நுழைந்திருந்தானோ.. அதன் வேகம் குறையாமலேயே வெளியேறவும் செய்திருந்தான்.. இருந்த அத்தனை நாழிகையிலும் ஒற்றை வார்த்தை வெளியிட்டிருக்கவும் இல்லை .
ஆனால் , அவன் செயல் தீவிரத்தையும்.. பலத்தை பற்றியும் அவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகைக்கு மட்டுமல்ல.. உடன் வந்த ரிச்சர்டை தவிர மற்றவர்களுக்கும் தெரிய வர கதிகலங்கி போயினர் .
அவர்களின் நினைப்பிலும் கலங்கடித்துக் கொண்டிருப்பவனையே.. மனதிற்குள் புலம்ப வைத்துக் கொண்டிருந்தாள்.. அவனது மனையாள் .
சரணோ , இந்த சூழலுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல்.. தன் வாகனத்திற்குள் ஏறியதில் இருந்து.. அலைபேசியில் தெரியும் தாமரையின் முகத்தில் மட்டுமே விழிகள் பதிந்திருக்க.. மென்மையாக , கட்டை விரல் கொண்டு வருடியவனாய் இருந்தான் .
நேற்றைய இரவில் , உதய் தாமரையோடு , ரிச்சர்ட் தாரவும் இணைந்தவர்களாக.. நால்வரும் சேர்ந்தார் போல் எடுத்திருந்த புகைப்படத்தில் இருக்கும் மனைவியை வெறித்தவனாய் . உதய்யின் அருகே ரிச்சர்ட் இருக்க.. இடமும் வலமுமாய் தாமரையும் தாராவும் நின்றிருந்தார்கள் .
உதய்.. அவளை தோளோடு அணைத்தவனாக நின்றிருக்க.. தாமரையோ , லேசாக.. அவன் மீது தலை சாய்த்திருந்தவளாய் பளீரென்று சிரிப்புடன் நின்றிருந்தாள் . ரிச்சர்டும் , மகிழ்ச்சியுடனே நின்றிருக்க.. தாரா , அவன் முதுகை வளைத்தவளாய்.. என்னவன் என்ற பெருமிதத்துடன் காணப்பட.. முதல்முறையாக , அண்ணனும் தங்கையும்.. இவ்வித தயக்கங்களும் இல்லாதவர்களாக.. தங்கள் இணைகளோடு சேர்ந்திருந்தார்கள் .
இவை , அனைத்தும் பத்தே நிமிடம்.. தாமரையை உதய் வேலையின் காரணமாக விலகி சென்றதால் தலைகீழாய் மாறி போக.. அப்படி என்ன நடந்திருக்கும் என்று மூளை முழுவதும்.. தன் யோசனையை தொடர்ந்ததாய் இருந்தது .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...