❤️பகுதி - 114❤️
ரிச்சர்ட் தன் கரங்களில் தாமரையை ஏந்தியவனாக , " சரண்..", என்று அலற..
மறுநொடி , " என்னாச்சு..", என்று அடித்துப் பிடித்து.. தொய்ந்து தலை தொங்கியவளாய் கரங்களுக்குள் சுமந்து வந்தவனிடம் புயலாய் பாய்ந்து இருந்தான் .
" சீக்கிரமா.. வண்டிய எடுங்க..", என்று ரிச்சர்ட்டின் அவசரமும் , நிலைக் குத்திய பார்வையுடன் இருந்த சரணை தீண்டயதாக தெரியவில்லை .
அவள் அணிந்து இருந்த ஆடையை நனைத்த உதிரத்திற்கு போதவில்லை போலும் , அவள் பாதங்களையும் நனைத்து இருக்க.. சரணின் ஜீவன் அவன் வசம் இல்லை . வெறித்த நிலையிலேயே , நின்று இருந்தவனிடம் வெளிப்படையாக தென்பட்ட பதற்றமும் நடுக்கமும்..
"பாப்பா..", என்ற கதறலுடன் அவளை தாங்க நினைத்து ரிச்சர்ட்டுடன் போராடியவனை , கன்னத்தில் ஒரு அறை அறைந்தே நிதானத்திற்கு அழைத்து வந்து இருந்தா ஆரவ்.. சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டான் .
இரத்த வெள்ளத்தில் , இமை திறவாது கிடந்த தாமரையை பார்க்கவே முடியாதவனாய் , " பாப்பா.. என்னாச்சு டீ.. கண்ணை முழுச்சு பாரு டீ.. ஸாரி ம்மா.. நீ இல்லேனா உன் மித்ரன் செத்துருவேன் டீ.. ", என்று ஏதே ஏதோ அரற்றியவனாக.. புலம்பிக் கொண்டே வர.. அவர்களோடு , உடன் வந்து இருந்த தாரா மற்றும் மான்சிக்குமே.. சரணின் தவிப்பு நில்லாமல் விழி நீரை சுரக்கச் செய்ததாய் .
குழந்தையைப் பற்றிய அக்கறையே அவனுக்கு இருந்ததாகவே தெரியவில்லை . மருத்துவமனை வளாகத்திற்குள் , வாகனம் நுழைந்ததோ இல்லையோ.. தன் தோளில் தன்னவளை அள்ளிக் கொண்டு புயல் வேகத்தில் உள்ளே ஓடத் துவங்கிவிட்டான் .
ஆரவ் தொலைபேசியில் மருத்துவமனையில் மருத்துவரிடம் தகவலை தெரிவித்து இருக்கவே , முன் ஏற்பாடாய் வாயில் நின்று இருந்த ஸ்ரெக்சர் மற்றும் மருத்துவர் குழு எதையும் சரண் கவனிக்க மறந்தவனாய் மனைவியுடன் சூறாவளி போல் நுழைந்து இருக்க.. அவன் பின்னோடு அவர்கள் ஓடி வர வேண்டியதாய் இருந்தது .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romantikaகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...