வா.. வா.. என் அன்பே - 114

1.4K 44 15
                                    

❤️பகுதி - 114❤️

ரிச்சர்ட் தன் கரங்களில் தாமரையை ஏந்தியவனாக , " சரண்..", என்று அலற..

மறுநொடி , " என்னாச்சு..", என்று அடித்துப் பிடித்து.. தொய்ந்து தலை தொங்கியவளாய் கரங்களுக்குள் சுமந்து வந்தவனிடம் புயலாய் பாய்ந்து இருந்தான் .

" சீக்கிரமா.. வண்டிய எடுங்க..", என்று ரிச்சர்ட்டின் அவசரமும் , நிலைக் குத்திய பார்வையுடன் இருந்த சரணை  தீண்டயதாக தெரியவில்லை .

அவள் அணிந்து இருந்த ஆடையை நனைத்த உதிரத்திற்கு போதவில்லை போலும் , அவள் பாதங்களையும் நனைத்து இருக்க.. சரணின் ஜீவன் அவன் வசம் இல்லை . வெறித்த நிலையிலேயே , நின்று இருந்தவனிடம் வெளிப்படையாக தென்பட்ட பதற்றமும் நடுக்கமும்..

"பாப்பா..", என்ற கதறலுடன் அவளை தாங்க நினைத்து ரிச்சர்ட்டுடன் போராடியவனை , கன்னத்தில் ஒரு அறை அறைந்தே நிதானத்திற்கு அழைத்து வந்து இருந்தா ஆரவ்..  சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டான் .

இரத்த வெள்ளத்தில் , இமை திறவாது கிடந்த தாமரையை பார்க்கவே முடியாதவனாய் , " பாப்பா.. என்னாச்சு டீ.. கண்ணை முழுச்சு பாரு டீ.. ஸாரி ம்மா.. நீ இல்லேனா உன் மித்ரன் செத்துருவேன் டீ..  ", என்று ஏதே ஏதோ அரற்றியவனாக.. புலம்பிக் கொண்டே வர.. அவர்களோடு , உடன் வந்து இருந்த தாரா மற்றும் மான்சிக்குமே.. சரணின் தவிப்பு நில்லாமல் விழி நீரை சுரக்கச் செய்ததாய் .

குழந்தையைப் பற்றிய அக்கறையே அவனுக்கு இருந்ததாகவே தெரியவில்லை . மருத்துவமனை வளாகத்திற்குள் , வாகனம் நுழைந்ததோ இல்லையோ.. தன் தோளில் தன்னவளை அள்ளிக் கொண்டு  புயல் வேகத்தில் உள்ளே ஓடத் துவங்கிவிட்டான் ‌.

ஆரவ் தொலைபேசியில் மருத்துவமனையில் மருத்துவரிடம் தகவலை தெரிவித்து இருக்கவே , முன் ஏற்பாடாய் வாயில் நின்று இருந்த ஸ்ரெக்சர் மற்றும் மருத்துவர் குழு எதையும் சரண் கவனிக்க மறந்தவனாய் மனைவியுடன் சூறாவளி போல் நுழைந்து இருக்க.. அவன் பின்னோடு அவர்கள் ஓடி வர வேண்டியதாய் இருந்தது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now