அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
இப்படிக்கு
கனி தேவ்💕💕💕பகுதி - 38
இருவரும் இருக்கும் இடம் சமையல் அறை என்பதையும் மறந்து.. அவளுள் மூழ்கியவனாக.. இதழோடு போட்டிப் போட்டது போதவில்லை என்று நினைத்திருப்பான் போலும்.. நெற்றி.. கன்னம் என்று முகத்தில் ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல்.. முத்தத்தால் அர்ச்சித்தவன்.. பின் அவளது கழுத்துக்கடியில் புதைய.. நிலையிழந்தவளாய் பின்னே சாய்ந்ததில்.. அடுப்பு மேடையில் இருந்த பாத்திரம் ஒன்று கீழே விழுந்து உருண்டோடி பெருஞ்சத்தத்தை உண்டு பண்ணியதில்.. தெளிந்த தாமரை.. பயத்தால் ஏற்பட்ட பிடிவாதத்தோடு , வேகமாக அவனை விலகிய செயல்.. சரணுக்கு , இருந்த இதம் அறுபட்டதில் கிளந்தெழுந்த சினத்தால்.. கண்கள் பளபளக்க நின்றிருந்தவனின் தோற்றம் கண்டு சில்லிட்டு போனாள்..
" அ.. தூ.. கி..ட்..சன்ல.. அதா..ன்..", என்று தந்தியடித்தவளை.. ஒற்றை கரத்தால் இரு கன்னத்தையும் பற்றியவன்.. " இனிமேல்.. இங்க வந்து படம் பிடிக்கச் சொல்லு.. புரிஞ்சதா..", என்று மீண்டும் குவிந்திருந்த இதழை சுவைத்த பின் திரும்பியே பார்க்காமல் வெளியேறினான் . அவன் சென்ற திசையையே வெறித்திருந்தவளுக்கு என்ன கூறினான் எதற்காக கூறினான் என்று புரியவே இல்லை.. படம் என்று கூறியதால் மட்டுமே அது வேந்தனாக இருக்கும் என்று அழுத்தமாக அவளது மனம் நம்பியது . அதனால் , அப்படி என்ன செய்திருப்பான் என்றே குழம்பியவளாய் நின்றிருக்க.. வேந்தனும் அழைத்திருத்திருந்தான்..
"என்னத்த செஞ்சீய.. அவிய அம்புட்டு கோவமா இருக்காவ..", என்று அவனிடம் பொறிந்துத் தள்ள..
" ஹேய் தாமரை.. என்னாச்சு ", என்று பதற்றத்தோடு கேட்டதில்..
" ஒன்னும் ஆகலை.. உங்கள இங்குன வந்து படம் பிடிக்கச் சொன்னாவ..", என்று அவளுக்கு புரியாதது.. தன் தமயனால் புரிந்துக் கொள்ள முடியுமோ என்று சொல்லவும்.. சிலகணங்கள் , ஆழ்ந்த அமைதியில் இருந்தவன்.. பின் சத்தமிட்டு சிரித்து.. " ஆமா , நீ எங்க இருந்த..", என்றான் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...