அன்பே -3

1.8K 40 8
                                    

பகுதி - 3

முதலில் அவளுடைய புகார்களை சிறுபிள்ளைதனம் என்று ரசித்து ஒதுக்கியவன் . நாளடைவிலேயே , அவளிடத்தில் உண்டான மாறுதல்களின் தீவிரத்தை உணர்ந்தான் . எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதவள்.. படம் தொழில்.. பாப்புலாரிடி என்று வருகையில் முற்றிலும் மாறுபட்டவளாய் இருப்பதை இணங்க கண்டு கொண்டான் .

பார்த்தவுடன் பிடித்தம் , பழக பழக காதல் , பின் திருமணம் என்று அனைத்தும் ஜெட் வேகத்தில் நடந்தேறியிருக்க . கண்டித்த நணபர்களிடம்.. எப்பொழுதும் சிந்தும் அக்மார்க் சிரிப்பால் கட்டுப்படுத்திவிட்டான் . சிறு வயது முதல் அனைத்து அவன் விருப்பத்தில் மட்டுமே இருந்ததால் உற்ற துணை என்று அழைத்து வருபவளை, பெற்றவர்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் போவார்களா..!

மெதுவாக அவன் அறைக்குள் நுழைந்த மயூரி , மகன் அமர்ந்திருந்த நிலையில் பதறியவராய் நெருங்கி ,

" அதுனால என்ன கண்ணா.. வா.. ஷூட்டிங் இருக்கறதுனால தான போனா..‌ நீ ஏன் இப்படி உட்காந்திருக்க.. " என்று கரம் பிடித்து எழுப்ப , அப்பொழுதும் தங்கள் வாதங்கள் தாய்க்கு அறிந்திருக்குமோ என்று நினைக்காமல் , ஒருவேளை அம்மாவிடம் சொல்லி சென்றிருப்பாளோ என்றே நினைத்துள..

" உங்கிட்ட அவ சொன்னாளா ம்மா..?", என்று எதிர்பார்பில் கேட்ட மகனின் முகத்தை வருத்தப்பட வைக்க விரும்பாதவாராய் .. ஆமாம் என்பது போல் தலையசைத்து , "ஆமா கண்ணா.. உங்கள தேடி மேல வந்துட்டு இருந்தேனா.. அப்போதா சொல்லீட்டு போனா.. எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற நீ வா.. " என்று சொல்லி அழைத்துச் சென்றார் . அதில் பிரகாசமானாலும் ,

முதன்முதலில் பள்ளிக்குப் போகும் பாலகன் நிலையில் சரண் இருக்க... அவன் தாயும் புரிந்துக் கொண்டாரோ..? மகனது கரத்தை விடாது பற்றியவராய் இறங்கி வந்தவர்‌‌.. தன் மாமனார் மாமியாருடன் இருக்கும் மாறு உத்தரவிட்டு , வேலையிருப்பது போல்  அந்த இடத்தை விட்டு உள்ளுக்குள்ளே நகர்ந்துவிட்டார் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now