பகுதி - 3
முதலில் அவளுடைய புகார்களை சிறுபிள்ளைதனம் என்று ரசித்து ஒதுக்கியவன் . நாளடைவிலேயே , அவளிடத்தில் உண்டான மாறுதல்களின் தீவிரத்தை உணர்ந்தான் . எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதவள்.. படம் தொழில்.. பாப்புலாரிடி என்று வருகையில் முற்றிலும் மாறுபட்டவளாய் இருப்பதை இணங்க கண்டு கொண்டான் .
பார்த்தவுடன் பிடித்தம் , பழக பழக காதல் , பின் திருமணம் என்று அனைத்தும் ஜெட் வேகத்தில் நடந்தேறியிருக்க . கண்டித்த நணபர்களிடம்.. எப்பொழுதும் சிந்தும் அக்மார்க் சிரிப்பால் கட்டுப்படுத்திவிட்டான் . சிறு வயது முதல் அனைத்து அவன் விருப்பத்தில் மட்டுமே இருந்ததால் உற்ற துணை என்று அழைத்து வருபவளை, பெற்றவர்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் போவார்களா..!
மெதுவாக அவன் அறைக்குள் நுழைந்த மயூரி , மகன் அமர்ந்திருந்த நிலையில் பதறியவராய் நெருங்கி ,
" அதுனால என்ன கண்ணா.. வா.. ஷூட்டிங் இருக்கறதுனால தான போனா.. நீ ஏன் இப்படி உட்காந்திருக்க.. " என்று கரம் பிடித்து எழுப்ப , அப்பொழுதும் தங்கள் வாதங்கள் தாய்க்கு அறிந்திருக்குமோ என்று நினைக்காமல் , ஒருவேளை அம்மாவிடம் சொல்லி சென்றிருப்பாளோ என்றே நினைத்துள..
" உங்கிட்ட அவ சொன்னாளா ம்மா..?", என்று எதிர்பார்பில் கேட்ட மகனின் முகத்தை வருத்தப்பட வைக்க விரும்பாதவாராய் .. ஆமாம் என்பது போல் தலையசைத்து , "ஆமா கண்ணா.. உங்கள தேடி மேல வந்துட்டு இருந்தேனா.. அப்போதா சொல்லீட்டு போனா.. எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற நீ வா.. " என்று சொல்லி அழைத்துச் சென்றார் . அதில் பிரகாசமானாலும் ,
முதன்முதலில் பள்ளிக்குப் போகும் பாலகன் நிலையில் சரண் இருக்க... அவன் தாயும் புரிந்துக் கொண்டாரோ..? மகனது கரத்தை விடாது பற்றியவராய் இறங்கி வந்தவர்.. தன் மாமனார் மாமியாருடன் இருக்கும் மாறு உத்தரவிட்டு , வேலையிருப்பது போல் அந்த இடத்தை விட்டு உள்ளுக்குள்ளே நகர்ந்துவிட்டார் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...