வா.. வா.. என் அன்பே - 110

2K 58 14
                                    

பகுதி - 110

எவ்வளவு முயன்ற போதும் , கட்டுக்கு அடங்காமல் கண்ணீர் வழிந்தோட நின்று இருந்தாள் ‌தாமரை . அவன் உயரம் மறந்து , தாயிடம் ஆறுதல் தேடும் சிறு குழந்தையை போல் அவளது இடையைக் கட்டிக் கொண்டு கதறுபவனின் தலைக்கோதவே மெல்லியாலின் விரல்கள்  தவியாய் தவித்தாலும் , தன்னைத்தானே அடக்கி ஆண்டவளாய் இரும்பு என நின்று இருந்தாள் ‌.

அவ்விருவருக்கும் தனிமையை கொடுக்க விரும்பியவர்களாக , விலகியே இருந்தாலும் , அவர்களின் அனைவரின் கவனமும் சரண் மற்றும் தாமரை இடத்திலேயே நிலைத்து இருந்ததாய் . தாமரையின் கோபத்தை அறிந்தவர்களால் சரணின் மனதில் என்ன ஓடுகிறது என்று சரிவர புரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தார்கள் என்றே கூற வேண்டும் .

தன் அறையை விட்டே வெளி வராதவனாய் , சரண் இருந்த போதும் , தாமரை ஆரவ் மற்றும் மான்சியுடன் இருப்பதை அறிந்த பின்பும் எவ்வித உணர்வுகளையும் வெளியிடாமல் இருக்கவே.. பெரியவர்களால் அவன் நினைப்பை பற்றி புரிந்துக் கொள்ளவே இயலவில்லை ‌ .  எதுவாக இருந்தாலும் , அவன் வாயில் இருந்தை வெளி வரட்டும் என்று நெஞ்சை கல்லாக்கியவர்களாக அமைதி காத்து இருக்க.. அதுவும் , இன்று காலை வரை மட்டுமே நிலைக்கச் செய்ததாய் ‌.

தாமரையின் பேச்சு , ரிச்சர்ட் மற்றும் விக்கி தவிர அனைவருக்குமே பெரும் அதிர்வை நிகழ்த்தி இருந்தது . ஒரு பெண்ணிடம், அத்துமீறி நடந்துக் கொள்ளும் அளவிற்காக மிருகமாய் மாறி போனான் என்று பெண்கள் அதிர செய்து இருந்தது என்றால் தாமரையின் தொடர் பேச்சோ ,  ' அய்யோ..', என்று கையறு நிலைக்கு அழைத்துச் சென்றதாய் .

தன் நண்பனின் இத்தகைய நிலைக்கு காரணமாக இருந்தவளின் மீது அத்தனை கோபமும் திரும்ப தீ பார்வையால் மான்சியை எரிக்க நினைத்து திரும்பியவளுக்கு , மேலும் அதிர்வு அலைகள் காத்து இருக்க.. ஸ்தம்பித்துவிட்டாள் ‌ .

உடல் விரைக்க நின்று இருந்தாலும் , மான்சியை தோளோடு அணைத்து தாங்கியவனாய் ஆரவ் நின்று இருக்க.. மான்சியோ , அவனது தோள் வளைவில் முகம் புதைத்தவளாய் அழுது துடிக்க.. சரணின் கதறலை கேட்ட பிறகோ , அவனை விட்டு வேகமாக நகர முற்பட்டவளை இழுத்து பிடித்து வைத்து இருந்தான் என்றே கூற வேண்டும் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now