வா.. வா.‌. என் அன்பே - 72

1.2K 36 20
                                    

பகுதி - 72

தாமரை கூறியதை உள்வாங்கிக் கொள்ளவே சரணுக்கு முழுமையாக ஒரு நிமிடம் பிடித்திருக்க , அதற்குள் அவளும் அகன்றிருந்தாள்... மனைவியின் சொற்களின் அர்த்தம் புரிந்ததும்.. உள்ளத்தில் மகிழ்ச்சியால் பொங்கிய ஆர்ப்பரிப்பு தாளாதவனாய் ஸ்தம்பித்துவிட்டான் .

இப்படியான பேச்சை சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவும் இல்லை . 'உன் மூச்சுக்காற்றும் என்னை சிலிர்த்தெழ செய்யும்.. '  என்றவளது வார்த்தைகள் இதுவரை , அவளது அதரங்கள் உதிர்க்காத ஐ லவ் யூ என்ற வாசகத்தையும் கோடி முறை கூறியது போல் , அவன் மனம் துள்ளிக் குதித்து பரவசம் அடைந்திருக்க.. உடனடியாக,  அவளை தேடிச் செல்ல மனம் கட்டளையிட்டு கால்கள் பரபரப்பாகவே.. அறையை விட்டு வேகமாக வெளி வந்திருந்தது.. அதே வேகத்துடன் பார்வையை சுழற்ற.. முதல்முறையாக , கீழே செல்லாமல்.. அவர்கள் அறைக்கு எதிராக அமைந்திருக்கும் ரூஃப் கார்டனின் கதவை திறந்து நின்றிருந்தாள் .

மெல்லியதாக முகத்தில் மோதி விளையாடிய காற்றிலும் கவனம் கொள்ளாமல் , தடதடக்கும் இதயத்தை அழுத்தமாக பிடித்து.. அதன் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றுக் கொண்டிருந்தாலும்.. திடீரென்று தனக்கு முளைத்த துணிவை பற்றி சிந்தித்தவளாய் நின்றிருந்தாள் .

தாமரையின் மனமோ உச்சக்கட்ட பரிதவிப்பில் துடித்துக் கொண்டும்.. அவளையே சாடிக் கொண்டும் இருந்தது..

" உனக்கு எங்குட்டு இருந்து புள்ள.. இப்படி பேச இம்புட்டு தைரியம் வந்தது.. வெட்கங்கெட்டு என்னென்ன உளறீட்டு வந்திருக்க.. உன்னைய பற்றி என்ன நினைச்சிருப்பாக.. வெட்கமே இல்லாதவன்னு யோசிச்சுருப்பாகளோ.. இல்ல..", என்று அவன் கடத்திய ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் விதமாக நினைத்து தடுமாறியவளாக நின்றிருந்தவளுக்கோ , அவன் முகம் காணும் தைரியமும் சுத்தமாக வற்றிப் போனதாய்..

எப்பொழுதும் , அவன் அருகாமையில் நா மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டு மனதை படபடக்க செய்யும் என்றாலும்.. அவன் காதலை கூறி நெருங்கும் பொழுதுகளிலோ , பதறும் நெஞ்சம்.. மான்சியால் உண்டான வலியை சினந்து காட்டினாலே.. துடிதுடித்து.. அவனிடத்தில் சரண் அடைபவளுக்கு.. கசங்கிய முகத்தை கண்டால் அமைதியாக இருந்திட முடியுமா என்ன.. படபடத்து தனக்குள் நிகழும்  உண்மையை கூறி ஓடி வந்துவிட்டாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now