வா.. வா.. என் அன்பே - 83

1.7K 38 15
                                    

பகுதி - 83

தாமரை ஒரு முடிவிற்கு வந்துவிட்ட பிறகு , அவளால் பூனை போல் சுற்றிக் கொண்டிருக்க முடியாமல் , குளியலறைக்குள் புகுந்து சரண் வர சொல்லி இருந்த இடத்திற்கு கிளம்ப தயாராக.. மிருதுவான புடவையை ஆசையுடன் வருடியவள் கச்சிதமாக தைக்கப்பட்டிருந்த ப்ளவுசை நினைத்து முகம் சிவந்த போதும்..  ஆசையுடன் புடவை அணிந்தவளாக , மெல்லிய ஒப்பனையுடன் வெளியேற கதவு திறக்கவும்.. சரண் அறையின் உள்ளே நுழைவதற்கு கதவில் கை வைக்கவும் சரியாக இருந்தது .

சரணின் வருகையில் திகைத்து தடுமாறியவளாக , ஸ்தம்பித்து நின்றிருந்தவளை உச்சி முதல் பாதம் வருடியவனின் விழி வீச்சை தாளாதவளாய் ,

" என்னைய வர சொல்லீட்டு , நீங்க வீட்டுக்கு வந்திருக்கீய..", என்று அவசரத்துடன் மொழிய ,

" ஏன் மேடம் எங்களோட எல்லாம் வர மாட்டீங்களோ..", என்றவனாக ஆடைகளை கலைந்துக் கொண்டிருந்தான் .

" நான் எப்போ அப்படி சொன்னேன்.. ", என்று முனங்கிக் கொண்டே அவனுக்கான ஆடைத் தேர்வில் இறங்கி விட..

" ஃபார்மலா எடுத்து வை..", என்றவனாக குளிர்யலறைக்குள் புகுந்துக் கொண்டான் .

' புடவையை வாங்கி கொடுக்க  தெரியுது.. ஆனா , எனக்கு நல்லா இருக்கா இல்லையான்னு சொல்றாவளா பாரு..', என்று முணுமுணுத்து திரும்ப.. கரங்களை கட்டிக் கொண்டவனாக பார்த்திருந்தான் .

அதனை சற்றும் எதிர்பாராதவளோ , கண்களை உருட்டியவளாக நின்று மேலும் காந்தம் போல் அவளிடத்தே அவனை எழுக்க.. " நல்லா இருக்கா இல்லையான்னு இங்கிருந்தே சொல்ல தெரியாது.. உனக்கு ஓகேன்னா சொல்லு நான் பக்கத்தில வந்தே சொல்றேன்.. ", என்றதோடு அல்லாமல் முன்னேறுவது போல் அடி எடுத்து வைக்கவும் , " ஆத்தீ.. ஆள விடுங்க..", என்று அலறியவளாக விரைந்தோட..

வாய்விட்டு நகைத்தவன் , " அந்த ஆளோட படத்தை நம்மளே வாங்கியாச்சு.. அதுவும் , அவனுக்கு அதிகமான லாபம் வர மாதிரி..", என்று சத்தமாக கூறியதில்.. ஓட்டம் எடுத்த பாதங்களோ , அப்படியே நின்றுவிட்டது . ஒற்றை புருவம் உயர்த்தியவளாய் , அவன் முகம் கண்டவள் , " திடுதிப்புன்னு ( திடீரென்று )  ஏன்..", என்றாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now