பகுதி - 10
இன்றும் குண்டு பல்பு எரியும் வீடுகளும் உண்டு . அதுவும் சென்னையில்.. பெரிதும் புகழ் பெற்ற வடபழனி ஏரியாவில் உள்ளது , என்பதை , தாமரையின் வீட்டை பார்க்கும் பொழுது நம்பத்தான் வேண்டும் .
கதவை மீண்டும் தட்ட.. அது திறக்கப்படாமல் போகவும்... ஒரு வாரமாய் அலைந்த களைப்பு... வீடு வரும் வரை தெரியாமல் இருந்தது . இப்பொழுது பாடாய்படுத்த.. தொய்ந்து விழும் கால்களை கட்டுப்படுத்தியபடி , மீண்டும் வேகமாக.. தட்டி... " அம்மா..." என்றழைத்தாள்.
அலிபாபா குகை போல்.. நான் திறக்க மாட்டேன் , என்று அழுச்சாட்டியத்தில் கதவிருக்க.. தொய்ந்து விழும் உடலையும் , பசியால் அலறும் வயிற்றையும்.. எவ்வளவு நேரம் கட்டுப்படுத்த முடியும் . தாங்களின் இடம் வந்து சேர்ந்தாகி விட்டது என்று கண்களுக்கு மட்டுமல்ல அவைகளுக்கும் புரிந்திருக்கும் போல் , வெகுவாக படுத்த தொடங்கியதில் , கதவின் நிலையிலேயே கையை வைத்து தாங்கியவளாய்..
மீண்டும் " அம்மா... " என்று ஆங்காங்கே... வெடித்திருந்த மரக்கதவின்.. இரும்புப்பிடியை மீண்டும் ஆட்டி அழைத்ததில் , உள்ளே இருப்பவருக்கு கேட்டதோ இல்லையோ ? எதிர் வரிசையில் இருந்த பெண்மணிக்கு எட்டிவிட.. வேகமாக வெளி வந்தவர்.. " தாமர.." என்று , அவள் பின் நின்று விளித்திருந்தார் .
" அக்கா... அம்மா எங்கக்கா ? " என்று கேள்வி கேட்டவளை கண்டுக்காமல்..
" அட ! இதை கொண்டா.." என்று பொதி மூட்டையாய் சுமந்து நின்றிருந்த பையை அவள் கரத்திலிருந்து வாங்கியவர் .
" இதுகல.. அங்குண வச்சுட்டு.. அழைச்சா என்ன..? " என்று மிகவும் வெசனப்பட்டவராக ,
" நீ வா புள்ள.. " என்று தன் வீட்டிற்கு அழைத்து சென்றார் . அந்த நடுத்தர வயது பெண்மணி சுந்தரி .
" தண்ணி கெடக்கேக்கா.. நா எங்குன... வைக்க.. அம்மா இல்லையா ? பாப்பாவும் இல்ல போல ? " என்று தன் பெட்டியை சுமை மூட்டையாக தூக்கி நின்றிருந்த காரணத்தை விளக்கியவளாக கூறியவாறே , அவருடன் நுழைந்தவளிடம்
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...