வா..வா.. என் அன்பே - 33

1.4K 40 10
                                    

பகுதி - 33

தாமரை மருத்துவமனை நடந்த சில மணித்துளிகள் கடந்தவுடனேயே , ரிச்சர்ட்.. வந்து இறங்கிவிட்டான். எப்பொழுதோ , சாந்தி அழைத்து அழுதிருக்க.. புறப்பட்டுவிட்டான். ஆனால், அதற்குள்.. வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்துப் பறக்க வேண்டியவளோ , தன் கூட்டை விட்டு பிரிந்திருந்த துயரம் நடந்தேறிவிட்டது..

" தாமரை..", என்று அவன் அழைத்தானோ.. இல்லையோ...

"அண்ணா", என்று கதறி ஒண்டிக் கொண்டவளை எப்படி சமாதானம் செய்ய முடியும்.. கைச்சிறகுக்குள் ஒடுங்கி இருப்பவளிடம்.. ஆறுதல் அளிக்க முயன்று தோற்றவனாய்.. அவளுடைய கதறலுக்கு.. அங்கிருக்கும்.. உயிரற்ற பொருட்களும் உயிர்பெற்று, கண்ணீர் வடித்திருக்கும்.. கண் கொண்டு காண இயலாமல் அனைவரும் இருக்க.. அடைக்கலமாகி இருந்தவளை சாந்தியிடம் ஒப்படைத்து.. சரணோடு மருத்துவரை அணுக.. உடல் கூறு ஆயிவிற்காக அனுப்பப்பட்டிருப்பதாக.. கூறவும் ரிச்சர்டும் ஆண்மகன் என்பதையும் மீறி சத்தமிட்டு அழுதுவிட.. ஆறுதால் அணைத்திருந்தான் சரண்.

" ரிச்சர்ட்.. கன்ட்ரோல் யுவர் செல்ஃப்.. நீயே இப்படி உடைஞ்சு போனா.. தாமரை என்ன ஆவா.. சொல்லு..", என்று தெளிய வைக்க முயல.. சரியாக வேலை பார்த்தது.. தாரா மற்றும் விக்கியும் மருத்துவமனைக்குள் கூடியிருந்தார்கள்.

அனலில் இட்ட புழுவாக துடித்து, கதறுபவளை தேற்ற வழித் தெரியாமல்.. அனைவரும் சமைந்து நிற்க.. ரிச்சர்ட்டின் முடிவு சரணை எரிமலையாக வெடிக்கச் செய்திருந்தது .

" ஏன்.. ", என்று கர்ஜனையில் வேகமாக நெருங்கிய , விக்கியும் ராமும்.. இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கான காரணம் என்ன என்று அறிய முற்பட.. இரு வேங்கைகள் ஒன்றோடு ஒன்று சிலிர்த்துக் கொண்டு அடங்காமல், ஒரே போல் திமிறிக் கொண்டிருப்பது போலவே..  விக்கிக்கோ , " இந்த நேரத்திலையும்.. என்னடா பஞ்சாயத்து கூட்றானுங்கன்னு தெரியலையே..", என்று உள்ளுக்குள் அலறி..

" என்னடா.. என்னாச்சு..", என்று இருவரையும் ஒன்று போல் அடக்கியவனாக கேட்டவுடன் ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now