வா.. வா.. என் அன்பே - 51

1.5K 50 18
                                    

பகுதி - 51

நள்ளிரவில் , வீடு நுழைந்த சரணுக்கோ.. அவ்வளவு சோர்வு.. மனதின் அயர்ச்சி வெகுவாக உடலையும் தாக்கியிருக்க.. வேலைப்பளுவும் அதிகமாகவே இருந்திருக்கவே.. மனைவியின் ஒதுக்கமும் முதன்மையாக இணைந்துக் கொண்டதில்.. வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவனாகவே.. தன் பணியில் மூழ்கிவிட்டான் .

ஆனால் , தாமரையின் இந்த அணைப்பைப் பற்றி.. மறந்தும் நினைக்காத ஒன்று.. சிறு குழந்தை போல்.. தன்னை கட்டிக் கொண்டிருப்பவளிடம்.. கோபம் கொள்ளவும் முடியவில்லை.. அதேசமயம் , அவள் நடந்துக் கொண்டதை ஏற்கவும் முடியாதவனாகவே இருந்தான் . ஏனோ , அவன் காதலை நம்பாததோடு.. அச்சத்தால் விலகி இருந்த நடத்தை.. பெரிதும் காயப்படுத்தியிருக்க.. முழுமையாக தன்னுடைய சினத்தை , அவளிடத்தில் காண்பிக்கவும் விடாமல் செய்பவளை எதில் சேர்க்க என்று தெரியாமல் தடுமாறியவனாய் .

தன் மேல் விழுந்திருப்பவளை , அப்படியே.. இறுக்கிக் கொள்ள இரு கைகளும் பரபரத்தாலும் , அழுத்தமாக‌.. நின்றிருந்தான் . அவளாக , ஓய்ந்து நிறுத்துவாள் என்று காத்திருக்க.. அவளுக்கோ.. அந்த சிந்தனையே இருப்பது போல் தெரியவில்லை .

" ஏய்.. ஏன் இப்படி அழுதுட்டே இருக்க..", என்று அழுத்தமாக.. தன் மனத்தாங்கலை.. எரிச்சலாக வெளியிட.. முதலில் , மிரண்டு திகைத்து விழித்தவள்.. பின் , அழுகுரலில் ,

" நான் ரொம்பவே பயந்துட்டேன்..", என்றாள்..

" எதுக்கு..", என்றவனின் குரல் கணிந்து வெளி வந்ததோ

" நீங்க.. போன் எடுக்கவே இல்லை.. உங்களுக்கு.. எ..து..னா..ச்..சு..", என்று மேலும் , அவன் இடையை இறுக்கிக் கொண்டவளாய்.. மார்பில் , அழுத்தமாக புதைந்துக் கொண்டே பதில் அளித்தவளின் உடலில் ஓடிய நடுக்கம்.. இழந்த இழப்புகளின் வலியை நினைவுப்படுத்த.. அதுவரை , அசையாமல்.. காலையில் இல்லாதது.. ' இப்ப புதுசா என்ன..', என்ற இறுமாப்பில் கற்சிலை போல் நின்றிருந்தவனுக்கு.. முடியாமல் போக.. ஒற்றைக் கரத்தால் லேசாக அவளது தோள் வளைத்தவன்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now