அன்பே - 13

1.2K 28 2
                                    

பகுதி - 13

கடனுக்கு பணம் கேட்டதற்காக , வேலையில் இருந்தே , தூக்கிவிட்ட கொடை வள்ளலாய் மான்சி இருப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை தாமரை .

வாகனத்தில் அடிப்பட இருந்தவளை , பிடித்திழுத்திருந்தது , ஒரு வலிய கரம்..

சித்தம் கலங்கியவளாக..‌ அவனையும்  அடையாளம் தெரியாதவளாய் வெறிக்க ," தாமரை.. ஹேய் என்னாச்சு? " , என்று முதலில் தன் வார்த்தைகளில் அவசரம் காட்டியவன்.. அவள் நிலையில் மாற்றம் இல்லாமல் போகவே , ஓங்கி ஓர் அறைவிட்டான் . அதில், சற்று தெளிந்தாலும் மலங்க மலங்க விழித்து பார்ப்பவளை , இழுத்து சென்று ஒரு ஹோட்டலில் அமர வைத்தவன், பின் இருவருக்கும் காஃபி ஆடர் செய்து வந்தவுடன்.. குடி என்பது போல் அவள் கரத்தில் வலுக்கட்டாயமாக திணித்து அருந்த செய்தான் முகில்வேந்தன் . அதன் பின்னே.. அவளது முகத்தில் சற்று தெளிவு தெரியவும் ," என்னாச்சு ?" என்றான் கனிவாக..

அதற்கு மேல் முடியாதவளாக , "அண்ணே.. என..க்கு.." , என்று வேலை போனது முதல்.. அவளுக்கு இருக்கும் நெருக்கடி வரை கூறி முடித்தவள்.. இருக்கும் இடம்  பொதுவிடம்.. பலர் வந்து செல்லக்கூடியது என்பது அனைத்தையும் மறந்தவளாக.. மேஜை மீதே தலையை கவிழ்த்து கதறவும், முதலில் திகைத்து பின் அவளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே மேலோங்க, அவளை நெருங்கியவன் தோளோடு சாய்த்து.. " ஷ்ஷு‌.. அழக்கூடாது.. சரியா?" என்றாலும்.. தன்னாலும் எதுவும் செய்ய முடியாதே..‌ ! இப்பொழுது தான் பல வருடக் காத்திருப்பிற்கு பின் ,  பலனாக முதல் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்குள் இத்தனை லட்சத்திற்கு அவன் எங்கே செல்ல..?

இப்பொழுதுதான் படப் பூஜையே முடிந்திருக்கிறது . அடுத்த வாரம் முதலே ஷூட்டிங் தொடங்க இருப்பதாக உள்ளது. அவன் படத்தில், நடிகை உதயதாரா மட்டுமே முன்னணி நடிகையாக இருக்கிறாள். நாயகனில் இருந்து பலர் புது முகங்களே இருப்பதாக கூறியவன் .

அவனும் அவளோடு வீடு வரை வந்திருந்தான் . " வீட்டுக்குள்ள வாண்ணே.." , என்று பாசமாக அவள்  அழைக்க , வெளிக் கதவருகிலேயே... நின்று பூட்டியிருந்த எதிர்திசை சுந்திரி அக்காவின் வீட்டை பார்வையிட்டவனாக..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now