வா.‌. வா.‌ என் அன்பே - 90

1.3K 41 15
                                    

பகுதி - 90

ரிச்சர்ட் , தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவனாக , வாசலை நோக்கி நடந்துவிட்டான் .

சாந்தியும் அவரின் சஞ்சலத்தை மறைத்தவராக , " என்னாச்சு கண்ணு.. ஏன் ரொம்ப சோர்வா இருக்க.. ", என்று தாமரையிடம் வாஞ்சையாக வினவ..

" ஒன்னுமில்லை க்கா.. ", என்றாள் ‌.

" பொறவு ஏன் மாப்பிள்ளை வெல்லன ( விரைவாக ) கிளம்பினாக.. இவனும் குதிக்கிறான்.. ", என்று மென்குரலில் வருத்தமாக சொல்ல..

" ஆங்.. குதிக்கிற உங்க பையன கேள்வி கேளுங்க.. எதுக்காக ஆளாளுக்கு இவளை வறுத்து இடுக்குறீங்க..', என்று ஆரா சத்தமிட..

" ஆரா.. சும்மா இரு புள்ளை..", என்று அடக்கியவள்..

" உங் கூட ரெண்டு நாள் இருந்திட்டு போலாம்னு நினைச்சேன் க்கா.. அதுக்கு அவிய வரச் சொல்லீட்டாக.. அண்ணனும் கண்டுகிச்சு ( கண்டு கொண்டான்) .. அதேன்.. கபி இன்னும் எழுந்திரிக்கலையே.. ", என்று தாமரை பேசிக் கொண்டிருக்கும் பொழுதே.. ரிச்சர்ட் விடாமல் அடித்த ஹாரன் ஒலி அனைவரின் காதுகளை கிழிக்கவும்..

" சரி ஆத்தா.. நான் அவனை பார்த்துக்குறேன்.. இப்ப வெரசா ( விரைவாக ) நீ கிளம்பு.. நா ரெண்டு ஒரு நாள்ல.. முறையா உங்க வீட்டுகே வந்து அழைக்கேன்.. சரியா.. போ.. போ.. அவன் உள்ள வரதுக்கு முந்தி கிளம்பு.. கோவக்காரப் பைய கை நீட்டிப் புடுவான்.. ", என்றவராக வாயிலை நோக்கி நடக்க துவங்கி இருந்தார் .

அவரின் பின்னே தொடர்ந்தவள்..
" வந்துட்டேன் ண்ணே.. எல்லார்கிட்டயும் சொல்லிக்க வேணாமா.. அவியலுக்கு மேல இருக்க..", என்று மென்மையாக கடிந்தவளாகவே வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் .

" ரிச்சா.. பார்த்து கூட்டிட்டு போ.. அலைச்சல்ல சோந்து தெரியுறா..", என்று சாந்தியும் விடைக் கொடுக்க.. தங்கை அமர்ந்ததுமே , வேகமாக கிளம்பி இருந்தான் .

பயணத்தில் ஈடுபட்டிருந்தவனுக்கும் சரணின் செயலும் , சினமும் உள்ளுக்குள் நெருடலை ஏற்படுத்தி இருந்தது . தாமரை அவனை நெருங்க முயற்சிப்பதும்.. அதற்கு சரண் தவிர்ப்பது.. அப்பட்டமாக தெரிந்ததை நொடிக்குள் கண்டுக் கொண்டவனுக்கோ.. எத்தனை நாட்களாக என்ற கேள்வியில் வந்து நிற்க.. கல்யாண வேளையில் , கவனிக்க தவறிவிட்டாதாக மனம் அடித்துக் கூறியது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now