வா.. வா.. என் அன்பே - 34

1.5K 40 11
                                    

பகுதி - 34

சரண் வெகு இயல்பு போல் , கடந்த பதினைந்து நாட்களாக அனைவரிடமும் காட்டிக் கொண்டாலும் , தாமரை அவனிடம் மட்டுமே விலகி இருக்கும் செயலால் , சுழற்றி அடித்த சுனாமி தாக்கியது போல் அவன் மனம் சிதைந்து வெறுமையில் திண்டாடுவதை அவன் மட்டுமே அறிவான் . 

ரிச்சர்ட் உரைத்த உண்மை வெகுவாக தாக்கிடவே விலகிவிட்டான் ‌‌. அவன் கூறியது போல் பணத்திற்காக மனைவியாக அழைத்து வரப்பட்டவள்.. என் மனைவி அல்ல என்று உருப்போட்டவனாக திரிந்தாலும்.. நொடிக்கு நொடி தாமரையின் நலனிலேயே வந்து நிற்க.. ஒருவருக்கு தெரியாமல்.. அவளை கண்காணிக்க ஆள் ஏற்பாடு செய்திருந்தான் . அழுகையால் மட்டுமே கரைந்துக் கொண்டிருக்கிறாள்.. யார் பேச்சையும் கேளாமல் தனக்குள்ளாகவே மறுகி துடிக்கிறாள்.. என்று தெரிந்தவுடன் , அவளை காண தேடி ஓடி வந்துவிட்டான். அவள் நலனில் மட்டுமே அக்கறைக் கொள்வது ஏன் என்று யோசிக்கவும் அஞ்சி இருந்தான் .

இரு வாரங்களில் தெளிந்துவிடுவாள் என்று அவன் காத்திருக்க.. வாரங்கள்.. அல்ல மாதங்கள் ஆனாலும் வருடங்கள் ஆனாலும்.. இவர்களின் இழப்பில் இருந்து வெளிவரவே முடியாது.. என்று புரிந்த தருணமாக , கைச் சிறைக்குள் நெஞ்சில் புதைந்து ஊமையாய் அழுதுக் கொண்டிருப்பவளின் நிலை உணர்த்த.. 

எப்படி எவ்வாறு அவளை அமைதிப்படுத்துவது என்று தெரியாமலேயே , ஆறுதல் அளிக்க.. மனைவியின் அடைக்கலமும் , நெகிழ்வும்.. வெளிப்படுத்திய மெல்லிய உரிமையான அணைப்பும் என்று மொத்தமாக , தடம் புரண்டவன்.. ஆறுதலுக்காக அளித்த முத்தம்.. கொஞ்சம் கொஞ்சமாக கணவனுக்குரிய விதத்தில் இடம் மாறியதாய் .  

சரணின் அணைப்பு மேலும் இறுக.. தாமரைக்கோ , உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் புதுவித உணர்வு.. அதன் கணம் தாளாமல்.. மெல்லிய நடுக்கம் , நெகிழ்வு என்று அவள் உடல் வெளிப்படுத்த.. அணைப்பிற்குள் இருந்தவளின் வேகமான இதயத்துடிப்பையும்‌‌.. சரணாலும் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now